sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முரசொலி நில வழக்கு: ஆணையம் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

/

முரசொலி நில வழக்கு: ஆணையம் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

முரசொலி நில வழக்கு: ஆணையம் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

முரசொலி நில வழக்கு: ஆணையம் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு


UPDATED : ஜன 10, 2024 11:54 AM

ADDED : ஜன 10, 2024 10:52 AM

Google News

UPDATED : ஜன 10, 2024 11:54 AM ADDED : ஜன 10, 2024 10:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: முரசொலி நிலம் தொடர்பான வழக்கில், பட்டியலினத்தோர் ஆணையம் விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம், ஆதிதிராவிட சமூகத்தினருக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக, பா.ஜ., பிரமுகர் சீனிவாசன், தேசிய ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, முரசொலி நிர்வாகத்துக்கு, 2019 நவம்பர், டிசம்பரில், ஆணையம் 'நோட்டீஸ்' அனுப்பியது.

இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், முரசொலி அறக்கட்டளை சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலத்தின் உரிமை குறித்து, தேசிய ஆதிதிராவிட ஆணையம் உத்தரவிட, தடை விதிக்கவும் கோரப்பட்டது.



ஐகோர்ட் உத்தரவு

இந்த வழக்கில் இன்று(ஜன.,10) சென்னை ஐகோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவு: முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளதாக எழுந்த புகாரில் விசாரணையை தொடரலாம்.

அனைத்து தரப்புக்கும் வாய்ப்பளித்து விளக்கத்தைப் பெற்று, பட்டியலினத்தோர் ஆணையம் புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தேசிய பட்டியலின ஆணையம் விசாரிக்க தடை கேட்டு, முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தவிட்டார்.

வழக்கறிஞர் பேட்டி

இது தொடர்பாக வழக்கை தொடுத்த சீனிவாசன் என்பவரின் வழக்கறிஞர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஆர்.எஸ்.பாரதி விசாரணையை நடத்த ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தார். ஆனால் ஆணையத்திற்கு முழு அதிகாரம் உள்ளது என நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது என தெரிவித்தார்.








      Dinamalar
      Follow us