sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காதல் மனைவி கொலை; கணவன் வெறிச்செயல்

/

காதல் மனைவி கொலை; கணவன் வெறிச்செயல்

காதல் மனைவி கொலை; கணவன் வெறிச்செயல்

காதல் மனைவி கொலை; கணவன் வெறிச்செயல்

2


ADDED : பிப் 12, 2024 06:21 AM

Google News

ADDED : பிப் 12, 2024 06:21 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம் : கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்தவர் பாரதிதாசன், 32. திருப்பூர் மாவட்டம், பல்லடம் பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் நிஷா, 24. இருவரும் காதல் திருமணம் செய்தனர். இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இவர்கள் கரூரில் வசித்த நிலையில், நிஷா, அவ்வப்போது பல்லடத்தில் உள்ள தாய் வீட்டிற்கு செல்வது வழக்கம். பல்லடத்தில் வேலை பார்த்து, அங்கேயே தங்க நிஷா விரும்பினார்.

இதற்கு பாரதிதாசன் மறுத்தார். சில தினங்கள் முன் பல்லடம் வந்த நிஷா, கரூர் திரும்பவில்லை. பாரதிதாசன் அழைத்தும் அவர் வரவில்லை.

நேற்று பல்லடம் வந்த பாரதிதாசன், நிஷாவை அழைக்க, வர மறுத்த அவர், தன் தாலியை கழற்றிவைத்தார். இதனால் ஆத்திரமடைந்த பாரதிதாசன், அரிவாளால் மனைவியை வெட்டிக் கொலை செய்தார். பல்லடம் போலீசார், பாரதிதாசனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us