sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க., கொடி கட்டிய கார்களில் பெண்களை துரத்திய வாலிபர்கள்; வைரல் ஆகும் பகீர் வீடியோ!

/

தி.மு.க., கொடி கட்டிய கார்களில் பெண்களை துரத்திய வாலிபர்கள்; வைரல் ஆகும் பகீர் வீடியோ!

தி.மு.க., கொடி கட்டிய கார்களில் பெண்களை துரத்திய வாலிபர்கள்; வைரல் ஆகும் பகீர் வீடியோ!

தி.மு.க., கொடி கட்டிய கார்களில் பெண்களை துரத்திய வாலிபர்கள்; வைரல் ஆகும் பகீர் வீடியோ!

75


UPDATED : ஜன 30, 2025 05:36 PM

ADDED : ஜன 29, 2025 11:52 AM

Google News

UPDATED : ஜன 30, 2025 05:36 PM ADDED : ஜன 29, 2025 11:52 AM

75


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை அருகே இரவு நேரத்தில் காரில் வந்த பெண்களை, தி.மு.க., கொடி கட்டிய 2 கார்களில் துரத்தி வந்து வாலிபர்கள் மிரட்டிய வீடியோ காட்சிகள் பகீர் கிளப்பி உள்ளன.

இதுபற்றிய விவரம் வருமாறு;

சென்னை அடுத்த, முட்டுக்காடு பாலம் அருகே இரவு நேரத்தில் கார் ஒன்றில் சில பெண்கள் பயணித்துள்ளனர். அப்போது அவர்களின் காரை, 2 கார்களில் வந்த வாலிபர்கள் சிலர் கண்டுள்ளனர். அதில் ஒரு காரில் தி.மு.க., கொடி கட்டப்பட்டு இருந்திருக்கிறது. பெண்களை கேலி செய்த அந்த வாலிபர்கள், ஒரு கட்டத்தில் அவர்கள் வந்த காரை துரத்தி இருக்கின்றனர்.

இதைக்கண்ட பெண்கள் அச்சத்தில் உறைந்து போயினர். என்ன நடக்கிறது என்பதை யூகிக்க முடியாமல் திணறினர். ஒரு கட்டத்தில் பயந்து போய், பீதியில் அலறிய பெண்கள் தாங்கள் வந்த காரை நிறுத்தாமல் சென்றுள்ளனர். பின்னால் 2 கார்களில் இருந்து அதி வேகத்தில் துரத்திக் கொண்டு வந்த வாலிபர்கள், முந்திச்சென்று சாலையின் நடுவழியில் மறித்துள்ளனர். காரை ரிவர்ஸ் எடுக்க முயற்சித்த போதும், விடாமல் துரத்தி இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் பயந்து போய் பெண்கள் காரை நிறுத்த, அவர்களை நோக்கி வேகமாக வந்த வாலிபர்கள் கார் கண்ணாடியை ஆவேசமாக தட்டி ஏதோ கூறி மிரட்டி இருக்கின்றனர்.

நிலைமையின் முக்கியத்துவத்தை உணர்ந்த பெண்களில் ஒருவர், தமது செல்போனில் நடந்த அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். அவர்கள் பயத்தில் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு போன் செய்யும்படி கூறும் உரையாடலும் அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது.

இந்த வீடியோ இணையதளங்களில் வெகு வேகமாக பரவ, பெண்களின் பாதுகாப்பு பற்றிய கேள்விகள் எழ ஆரம்பித்து உள்ளன. பாதிக்கப்பட்ட பெண் கானாத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த புகாரில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்ட அவர், வாலிபர்கள் வந்த 2 கார்களில் வெள்ளை நிறம் கொண்ட ஒரு காரில் கட்சிக் கொடி ஒன்று கட்டப்பட்டு இருந்தததையும், தங்களை மிரட்டிச் சென்றதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார். மிரட்டியதோடு இல்லாமல் தங்களின் வீடு வரை பின்தொடர்ந்து வந்து பயமுறுத்தியதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த சம்பவம் ஜன.25ம் தேதி இரவு நடந்துள்ளதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புகார் மனு, வீடியோ காட்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில் 8 பேர் கொண்ட வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

குறிப்பிட்ட இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இதைக்கண்ட நெட்டிசன்கள் பலரும், போலீசாரையும், அரசையும் விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us