sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நரிக்குடி அருகே இரு பிரிவினர் மோதல் : வீடுகள், கார்கள் உடைப்பு; பதட்டம்

/

நரிக்குடி அருகே இரு பிரிவினர் மோதல் : வீடுகள், கார்கள் உடைப்பு; பதட்டம்

நரிக்குடி அருகே இரு பிரிவினர் மோதல் : வீடுகள், கார்கள் உடைப்பு; பதட்டம்

நரிக்குடி அருகே இரு பிரிவினர் மோதல் : வீடுகள், கார்கள் உடைப்பு; பதட்டம்


ADDED : ஜூலை 13, 2011 01:29 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 01:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி : விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே, இரு பிரிவினரிடையே ஏற்பட்ட திடீர் மோதலில், வீடுகள் மற்றும் கார்கள் அடித்து உடைக்கப்பட்டன.

அங்கு பதட்டம் நிலவியதால், போலீசார் குவிக்கப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டம், கட்டாலங்குளத்தில் நடந்த அழகுமுத்துக்கோன் குருபூஜைக்காக, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியிலிருந்து, ஒருபிரிவினர் நேற்று முன்தினம் சென்றனர். நிகழ்ச்சி முடிந்து திருச்சுழி, நரிக்குடி வழியாக ஊருக்குத் திரும்பினர்.



மாலை 6.30 மணிக்கு இருஞ்சிறையைச் சேர்ந்த முருகன், தன் மனைவியுடன், மறையூர் காலனி அருகே பைக்கில் வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு, நிற்காமல் சென்றது. இதனால், மறையூர் காலனியைச் சேர்ந்த ஒரு பிரிவினர் குருபூஜைக்கு சென்று திரும்பிய வேனின் கண்ணாடியை உடைத்தனர். இதனால் ஆத்திரமடைந்து, வேனில் வந்தவர்கள் மற்றும் உடன் வந்த அனைவரும், தங்கள் வாகனங்களை நிறுத்தி, ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, இரு பிரிவினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டதில், வீடுகளின் ஓடுகள் உடைக்கப்பட்டன. வாழை மரங்களும் சாய்க்கப்பட்டன.



வேன், டாடா சுமோ கார் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. போலீசார் பேச்சு நடத்திய பின், பூஜைக்கு சென்று வந்தவர்கள் வாகனங்களில் சென்றனர். இதனிடையே, வீடுகளை உடைத்ததாகக் கூறி, மறையூர் காலனியினர் திடீர் மறியல் நடத்தினர். அருப்புக்கோட்டை போலீசார் பேச்சு நடத்தியதால், அவர்களும் கலைந்து சென்றனர். தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவியதால், போலீசார் குவிக்கப்பட்டனர். இரு பிரிவினரும் நடத்திய மறியலால், அப்பகுதியில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.








      Dinamalar
      Follow us