ADDED : மே 16, 2026 11:24 PM
புதுடில்லி: இளநிலை மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வந்த, 20 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
வடமேற்கு டில்லி ஆசாத்பூர் லால் பாகில் வசித்த, 20 வயது இளம்பெண் சில ஆண்டுகளாக் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை தகனம் செய்ய, கேவல் பார்க் சம்ஷான் மயான பூமிக்கு நேற்று எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆதர்ஷ நகர் போலீசார், மயான பூமிக்கு சென்று, இளம்பெண் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக பாபு ஜெகஜீவன்ராம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கடந்த, 3ம் தேதி நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, அந்தத் தேர்வை ரத்து செய்து, ஜூன் 21ல் மறுதேர்வு நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
