ADDED : ஆக 25, 2011 06:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அருகன் குளத்தில் உள்ளது எட்டெழுத்து பெருமாள் கோயில்.
இங்கு பூசாரியாக இருப்பவர் வரதராஜப் பெருமாள் (50). இவர் மீது சிவஆனந்தி என்ற இளம்பெண், பாலியல் புகார் அளித்துள்ளார். வரதராஜப் பெருமாள், தன்னை ஏமாற்றி பலாத்காரம் செய்துவிட்டதாக அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, வரதராஜப் பெருமாள் கைது செய்யப்பட்டுள்ளார்.