அச்சில் ஏற்ற முடியாத மகா கேவலம்; ஆபாச அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு நெட்டிசன்கள் கண்டனம்
அச்சில் ஏற்ற முடியாத மகா கேவலம்; ஆபாச அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு நெட்டிசன்கள் கண்டனம்
ADDED : ஏப் 11, 2025 09:18 PM

சென்னை: அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு மகா கேவலமாக ஆபாச அமைச்சர் பொன்முடி பேசி உள்ளார் என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தி.மு.க., அரசில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. அண்மையில் விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இவர் பெண்கள் குறித்தும், சைவம், வைணவத்தை அவமதிக்கும் வகையில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது பேச்சு அருவருக்கத்தக்கதாக, காதில் கேட்கவே முடியாத ஒன்றாக உள்ளது.நாராச நடையில் ஆபாசமாக அமைச்சர் பேசியதற்கு கண்டனம் வலுத்து வருகிறது. அமைச்சரின் ஆபாச பேச்சு பெண்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து அவர் வகித்து வந்த துணை பொதுச் செயலாளர் பதவியை தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் பறித்து உத்தரவிட்டு உள்ளார். பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால், இந்த விஷயத்தில் தமிழக அரசு மவுனம் காக்கிறது. இச்சூழ்நிலையில், முதல்வர் ஸ்டாலினை, அவரது இல்லத்தில் சந்தித்து பொன்முடி பேசி , தனது பேச்சுக்கு விளக்கம் அளித்து உள்ளார்.
ஆனால், ஜெயலலிதா அல்லது கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில், ஒரு அமைச்சர் இப்படி அருவருக்கத்தக்க வகையில் பேசி இருந்தால் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டு இருப்பார். ஜெயலலிதாவும் அல்லது கருணாநிதியும் இது போன்ற அருவருக்கத்தக்க ஆபாச பேச்சுகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் இப்போதைய தி.மு.க., தலைமை வெறும் கட்சி பதவியை மட்டும் பறித்துவிட்டு இன்னும் பொன்முடியை அமைச்சராக பதவியில் விட்டு வைத்திருக்கிறது.
'அவர் பேசிய பேச்சு, கட்சிப் பதவியில் இருப்பதற்கு தகுதியற்றது; அமைச்சர் பதவியில் இருப்பதற்கு இத்தகைய ஆபாச பேச்சு தகுதியானது' என்று தி.மு.க., தலைமை நினைக்கிறதா என இணையத்தில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இன்று காலை பிரபல எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா வெளியிட்ட பதிவு:
கேவலம் - மகா கேவலம் என்ன வித்தியாசம்?
இப்படி தவறாகப் பேசினார் என சொல்லும்படி பேசுவது கேவலம்.
என்ன பேசினார் என்று கூட சொல்ல முடியாதபடி பேசுவது மகா கேவலம்