தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தெற்காசிய போட்டியில் பங்கேற்கிறது "கிளியாந்தட்டு'

தெற்காசிய போட்டியில் பங்கேற்கிறது "கிளியாந்தட்டு'

தெற்காசிய போட்டியில் பங்கேற்கிறது "கிளியாந்தட்டு'


UPDATED : மே 26, 2013 01:33 AM

ADDED : மே 26, 2013 01:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 26, 2013 01:33 AM ADDED : மே 26, 2013 01:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தில் உள்ள பழமையானவிளையாட்டுகளில் ஒன்று கிளியாந்தட்டு.இது கிளி பாரி, உப்புக்கோடு,உப்புப்பட்டி உள்ளிட்ட பல பெயர்களாலும்அழைக்கப்படுகிறது.இந்த விளையாட்டு இந்திய அளவில்சரமணி, சர்பட்டி, லோன் பட்டி, தார்யா பந்த்,சரகரி, பஞ்ச்வாடி, சிக்கா என பல்வேறு பெயர்களுடன் விளையாடப்பட்டிருக்கிறது.

கடந்த 1980களில், இந்த விளையாட்டைஇந்திய அளவில் ஒருங்கிணைத்து மேம்படுத்திய பின், தற்போது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. 'அட்டியா பட்டியா' எனஇந்தியில் அழைக்கப்பட்டாலும் இது தமிழக கிளியாந்தட்டின் வடிவம் தான். விளையாட்டு முறை ஒன்றுதான். கிராமங்களில் மாலை வேளையில், ஓய்வு நேரத்திலும், பொழுதுபோக்கிற்காகவும் விளையாடப்பட்ட இந்த விளையாட்டால் ஓடும் திறன், விழிப்புணர்வு, மதிநுட்பம் ஆகியவை அதிகரிக்கும். மேலும், உடல் பயிற்சி, கவனம், சமயோசித புத்தியும் வளரும்.

பூடான் நாட்டில் வரும் ஜூன் மாதம் 16 முதல், 19ம் தேதி வரை நடக்க உள்ள தெற்காசிய விளையாட்டு போட்டியில், அட்டியா பட்டியா இடம் பெறுகிறது. இதில் இந்திய அணி சார்பில் 16 பேர் கொண்ட குழு இடம் பெறுகிறது. அதில், தமிழகத்தில் இருந்து சிவசுப்பிரமணியன், 21, சர்வேஸ்வரன், 18, ஆகிய இருவரும்பங்கேற்கின்றனர்.இனி, இந்த விளையாட்டை எப்படிவிளையாடுவது என, தெரிந்து கொள்ளலாம்.

எப்படி விளையாடுவது?

செவ்வக வடிவத்தில் தரையில் கோடுகள் வரையப்பட வேண்டும். அந்த செவ்வகம் நீள வாக்கில் இரண்டாக பிரிக்கப்பட வேண்டும். கிளியாந்தட்டு விளையாட்டில், செவ்வகத்தின் இரண்டு பக்கமும் நான்கு அறைகளாக பிரிக்கப்படும். அட்டியா பட்டியாவில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். கிராமங்களில் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறுவர்கள் இரு சமமான குழுக்களாக பிரிக்கப்படுவர். முதலில் ஒரு குழு விளையாட்டில் இறங்கும்.

அவர்களை கீழே இறங்க விடாமல் எதிர்க் குழு தடுத்து, தொடுவதற்கு பிரிக்கப்பட்ட கிடைமட்டக் கோடுகளில் காவல் நிற்பர். அணி தலைவரை கிளி என்று அழைப்பர். இவர் தான் குழுவில் திறமையானவராகவும், சற்று உயரமான வராகவும் சுறுசுறுப்பு உடையவராகவும்இருப்பார்.

'கிளி ரெடி' என்றபடி இவர் மேல் நோக்கி ஏறி வருவார்; அப்போது, இறங்கும் குழு, வேகமாக முதல் கோட்டை தாண்டி முதல் கட்டத்திற்குள் வந்து விடுவர். இறங்கும் குழு எப்போதும் கிளியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கிளி அவரது கை எட்டும் அளவிற்கு எதிரணியினரை 'அவுட்' செய்யலாம்.

இப்படி இறங்கும் குழு முழுவதுமாக எல்லை கோடுகளை தாண்டி சென்றால், அவர்கள் பழம் என்றும், இறங்காதவர்களை காய் என்றும் கூறுவர். பழம் எடுத்தவர்கள், எதிரணியிடம் பிடிபடாமல் (அவுட்) சென்று தலைப்பக்கத்திற்கு சென்று விட்டால் ஆட்டம் ஒன்று (புள்ளி ஒன்று) மீண்டும் இறங்க வேண்டும். காய் 'அவுட்டானால்' வெளியே வந்து விடவேண்டும்.



சாம்பியன் பட்டம்:பழம், கோட்டில் இருப்பவர்களிடமோ, கிளியிடமோ 'அவுட்டானால்', எதிரணி தலைப்பக்கத்தில் இருந்து இறங்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து விளையாடலாம். இதில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் யார் அதிக புள்ளிகளை எடுக்கின்றனரோ அவர்கள் வெற்றி பெற்றவர்களாவர். தற்போதைய அட்டியா பட்டியாவில் அதிக அளவில் புள்ளி பெற்ற அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்படுகிறது.

இவ்விளையாட்டு பற்றி தமிழ்நாடு 'அட்டியா பட்டியா' சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில்,'ஒரு காலத்தில் கிராமங்களில் விளையாடப்பட்ட இந்த விளையாட்டு வரும் ஜூன் மாதம், பூடானில், தெற்கு ஆசிய போட்டியில் பங்கேற்கிறது. அதில், இந்திய அணி சார்பில் தமிழகத்தில் இருந்து இருவர் பங்கேற்கின்றனர்' என்றார்.

பூடானில் பங்கேற்கும் நாடுகள்: இந்தியா,கஜகஸ்தான்,பூடான், மியான்மர்,தாய்லாந்து, மலேசியா,பாகிஸ்தான்,நேபாளம்

வெற்றி பெற்றதமிழர்கள்:2011ஆனந்த்ராஜ்,2012நித்யபிரகாஷ்,2013சிவசுப்பிரமணியன்

என்ன விதிகள்?:ஒரு குழுவில் 9+3 பேர்இரண்டு குழுக்கள் பங்கேற்கும்ஒரு குழு 7 நிமிடங்கள் விளையாடலாம்முதலில் களம் இறங்கும் குழுவில் 5 பேர் இறங்குவர்எதிர் தரப்பில் 9 பேரும் இறங்குவர்

1986:நாக்பூர் - தேசிய அளவிலான போட்டி

1996:தமிழக அணி முதன் முதலாக பங்கேற்றது

201112:நாக்பூர் போட்டியில் தமிழகம் 3வது இடம்

2013:தேசிய அளவிலான தென்மண்டல போட்டிகளில், தமிழகம் 2வது இடத்தை பிடித்து வெள்ளி பதக்கம் பெற்றது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us