அவ்வையார் எத்தனை பேர்?நீண்ட காலம் கழித்து கல்வி துறை 'திடுக்' தகவல்
அவ்வையார் எத்தனை பேர்?நீண்ட காலம் கழித்து கல்வி துறை 'திடுக்' தகவல்
ADDED : நவ 13, 2013 12:02 AM

தமிழக அரசின், ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில், 'இரு அவ்வையார் இருந்தனர்' என, தெரிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.சங்க காலத்தைச் சேர்ந்த, மிகச் சிறந்த பெண்பாற் புலவர், அவ்வையார். தமிழிலும், அரச நிர்வாகத்திலும், நிறைந்த அறிவைப் பெற்றவர். தமிழில் ஏராளமான பாடல்களை
பாடியுள்ளார்.
தமிழ் பாட புத்தகங்களில்:
திடீரென தகவல்:
கோவையைச் சேர்ந்த, பெற்றோர், அசோக் கூறியதாவது:என் மகள், 'அவ்வையார், எத்தனை பேர்?' என, என்னிடம் கேட்டாள். 'ஒருவர் தான்' என, கூறினேன். இல்லை, 'இரண்டு பேர்' என, புத்தகத்தை காட்டினாள். ஓய்வுபெற்ற தொழிலாளர் நல ஆய்வாளரான, என் தந்தையிடம் கேட்டதற்கு, அவரும், 'அவ்வையார் ஒருவர் தாண்டா...' என, கூறினார்.நான் படித்தபோதும், ஏன், நாம் அனைவரும் படிக்கும்போது, அவ்வையார் ஒருவர் தான் என்பதைப் போல், புத்தகங்களில் கூறப்பட்டிருந்தன.இப்போது, திடீரென, 'இரு அவ்வையார்' என, கல்வித் துறை கூறியுள்ளது வியப்பளிக்கிறது. உண்மையிலேயே, அவ்வையார் எத்தனை பேர் என்பதை, கல்வித் துறை தெளிவுபடுத்த வேண்டும்.
விளக்குமா கல்வி துறை:
இது குறித்து, சென்னை அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றின், மூத்த முதுகலை தமிழ் ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'ஓய்வுபெற்ற பேராசிரியர், கோவிந்தராஜன் எழுதிய புத்தகத்தில், நான்கு அவ்வையார் இருந்ததாக, குறிப்பிடப்பட்டுள்ளது. சங்ககால அவ்வையார், திருவள்ளுவர் சகோதரியான ஒரு அவ்வையார் உட்பட, நான்கு பேர் என, குறிப்பிடப்பட்டுள்ளனர். உண்மையில், அவ்வையார் எத்தனை பேர் என்பதற்கு, ஆதாரப்பூர்வமான சான்றுகளோ, நுால்களோ இல்லை' என, தெரிவித்தார்.
மூன்று பேர் இருந்தனர்:
- நமது நிருபர் -
