
'ஹெச்.எஸ்.பி.சி., கோல்டு இ.டி.எப்., பண்டு ஆப் பண்டு அறிமுகம்'
ச ர்வதேச நிதி நிறுவனமான 'ஹெச்.எஸ்.பி.சி., இந்தியா' மியூச்சுவல் பண்டு சந்தையில் முதல்முறையாக 'ஹெச்.எஸ்.பி.சி., கோல்டு இ.டி.எப்., மற்றும் கோல்டு இ.டி.எப்., பண்டு ஆப் பண்டு' என்ற இரண்டு புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
என்.எப்.ஓ., காலம்: மார்ச் 16 - 18 (கோல்டு இ.டி.எப்.,)
என்.எப்.ஓ., காலம்: மார்ச் 19 - 25 (கோல்டு இ.டி.எப்., பண்டு ஆப் பண்டு)
குறைந்தபட்ச முதலீடு: இரண்டு திட்டங்களிலும் ரூ.5,000
நோக்கம்: தங்கம் அல்லது தங்கம் சார்ந்த பத்திரங்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவது
எங்கே முதலீடு: முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டப்படும் 95 சதவீதம் நிதி, தங்கம் மற்றும் தங்கம் சார்ந்த முதலீட்டு திட்டங்கள், 5 சதவீதம் கடன் பத்திரங்கள்
டிமேட் கணக்கு : ஹெச்.எஸ்.பி.சி., கோல்டு. இ.டி.எப்., திட்டத்தில் முதலீடு செய்ய அவசியம் தேவை. கோல்டு இ.டி.எப்., பண்டு ஆப் பண்டு திட்டத்தில் முதலீடு செய்ய தேவையில்லை.
எஸ்.ஐ.பி: பண்டு ஆப் பண்டு திட்டத்தில் மட்டும் எஸ்.ஐ.பி., முறையிலும் முதலீடு செய்யலாம். இதன் வாயிலாக திரட்டப்படும் நிதி, நேரடியாக கோல்டு இ.டி.எப்., பண்டு யூனிட்களில் முதலீடு செய்யப்படும்.

