sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஈக்வடாரில் இருக்கிறார் நித்யானந்தா; தமிழக அரசு ஐகோர்ட்டில் தகவல்

/

ஈக்வடாரில் இருக்கிறார் நித்யானந்தா; தமிழக அரசு ஐகோர்ட்டில் தகவல்

ஈக்வடாரில் இருக்கிறார் நித்யானந்தா; தமிழக அரசு ஐகோர்ட்டில் தகவல்

ஈக்வடாரில் இருக்கிறார் நித்யானந்தா; தமிழக அரசு ஐகோர்ட்டில் தகவல்

12


ADDED : ஜன 31, 2025 02:03 PM

Google News

ADDED : ஜன 31, 2025 02:03 PM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சர்ச்சை சாமியாரான நித்யானந்தா ஈக்வடாரில் இருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

போலீசாரால் தேடப்பட்டு வந்த சாமியார் நித்யானந்தா மீது பல வழக்குகள் உள்ள நிலையில், கடந்த 2019ல் தலைமறைவானார். கைலாசா என்னும் தீவுக்கு சென்றுவிட்டதாக நித்யானந்தாவே கூறியிருந்தார். அதனை ஹிந்துக்களுக்கான தனி நாடாக உருவாக்கியுள்ளதாகவும் அவரே கூறியிருந்தார். தங்களுக்கென தனியாக அரசு, தனிக் கொடி, பாஸ்போர்ட், நாணயம் உள்ளதாகவும், நித்யானந்தா அறிவித்தார்.

சமூக வலைதளங்கள் மூலம் வீடியோ சொற்பொழிவு ஆற்றி, வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். எனினும், கைலாசா நாடு எங்கு இருக்கிறது; நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பது தற்போது வரையில் புரியாத புதிராகவே இருந்து வந்தது.

இந்த நிலையில், வழக்கு ஒன்றில் நித்யானந்தா குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவின் மூலம், அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மடங்களை நிர்வகிக்க தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நித்யானந்தா சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது, 'நித்யானந்தா இந்தியாவிலேயே இல்லை. தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரில் இருக்கிறார்,' என்று அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வாதத்தை கேட்ட கோர்ட், இந்தியாவிலேயே இல்லாத நித்யானந்தாவின் வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us