sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பா.ஜ., உடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை: ஜெயக்குமார்

/

பா.ஜ., உடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை: ஜெயக்குமார்

பா.ஜ., உடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை: ஜெயக்குமார்

பா.ஜ., உடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை: ஜெயக்குமார்

52


UPDATED : ஜன 29, 2024 02:47 PM

ADDED : ஜன 29, 2024 12:02 PM

Google News

UPDATED : ஜன 29, 2024 02:47 PM ADDED : ஜன 29, 2024 12:02 PM

52


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தூக்கத்தில் இருந்து எழுப்பி கேட்டாலும் இனி பா.ஜ.,வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை'' என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வடக்கில் இண்டியா கூட்டணி, நெல்லிக்காய் மூட்டை போல சிதறிக்கொண்டு இருக்கிறது. அதே நிலைமை தமிழகத்திலும் வரும்.

திமுக கூட்டணியில் உள்ளவர்கள் எல்லாம் ஒரே கொள்கையில் ஊறியவர்கள் அல்ல; முரண்பாடுகள் உள்ளன. பா.ஜ., உடன் கூட்டணி இல்லை என பலமுறை கூறிவிட்டோம். தூக்கத்தில் இருந்து எழுப்பி கேட்டாலும் இனி பா.ஜ.,வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. அந்த பெட்டியை கழற்றிவிட்டோம்; இனிமேலும் அந்த பெட்டியை இன்ஜினுடன் சேர்க்கும் எண்ணமில்லை.

அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்தவே பேசி வருகிறார்; பா.ஜ.,வை முன்னிலைப்படுத்தவில்லை. நடக்காத விஷயத்தை கூறி திசை திருப்ப அண்ணாமலை முயற்சிக்கிறார். அவரை போல 'அண்ணே அண்ணே' என்று நாங்கள் கூழைக்கும்பிடு போடுபவர்கள் கிடையாது. கூழைக்கும்பிடு போட்டு, இங்குள்ள மக்களை ஏமாற்றி காலூன்ற நினைத்தால் அது வீணாக தான் முடியும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us