தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பா.ஜ., உடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை: ஜெயக்குமார்

பா.ஜ., உடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை: ஜெயக்குமார்

பா.ஜ., உடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை: ஜெயக்குமார்


UPDATED : ஜன 29, 2024 02:47 PM

ADDED : ஜன 29, 2024 12:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 29, 2024 02:47 PM ADDED : ஜன 29, 2024 12:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தூக்கத்தில் இருந்து எழுப்பி கேட்டாலும் இனி பா.ஜ.,வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை'' என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வடக்கில் இண்டியா கூட்டணி, நெல்லிக்காய் மூட்டை போல சிதறிக்கொண்டு இருக்கிறது. அதே நிலைமை தமிழகத்திலும் வரும்.

திமுக கூட்டணியில் உள்ளவர்கள் எல்லாம் ஒரே கொள்கையில் ஊறியவர்கள் அல்ல; முரண்பாடுகள் உள்ளன. பா.ஜ., உடன் கூட்டணி இல்லை என பலமுறை கூறிவிட்டோம். தூக்கத்தில் இருந்து எழுப்பி கேட்டாலும் இனி பா.ஜ.,வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. அந்த பெட்டியை கழற்றிவிட்டோம்; இனிமேலும் அந்த பெட்டியை இன்ஜினுடன் சேர்க்கும் எண்ணமில்லை.

அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்தவே பேசி வருகிறார்; பா.ஜ.,வை முன்னிலைப்படுத்தவில்லை. நடக்காத விஷயத்தை கூறி திசை திருப்ப அண்ணாமலை முயற்சிக்கிறார். அவரை போல 'அண்ணே அண்ணே' என்று நாங்கள் கூழைக்கும்பிடு போடுபவர்கள் கிடையாது. கூழைக்கும்பிடு போட்டு, இங்குள்ள மக்களை ஏமாற்றி காலூன்ற நினைத்தால் அது வீணாக தான் முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us