sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'எங்களுக்கு நஷ்டமில்லை.. கவர்னருக்கு லாபமில்லை!'

/

'எங்களுக்கு நஷ்டமில்லை.. கவர்னருக்கு லாபமில்லை!'

'எங்களுக்கு நஷ்டமில்லை.. கவர்னருக்கு லாபமில்லை!'

'எங்களுக்கு நஷ்டமில்லை.. கவர்னருக்கு லாபமில்லை!'

11


ADDED : ஜன 15, 2025 09:18 AM

Google News

ADDED : ஜன 15, 2025 09:18 AM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை; ''முச்சந்தியில் நின்று சண்டை போடுவதை போல, ஆட்சியோடு தமிழக கவர்னர் சண்டை போட்டு கொண்டிருக்கிறார். அதனால் எங்களுக்கு ஒன்றும் நஷ்டமில்லை; கவர்னருக்கு லாபமுமில்லை,'' என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வேலுார் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில், அமைச்சர் துரைமுருகன், தொண்டர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழக கவர்னர், அவருக்கு உரிய மாண்பையும், மரியாதையையும் இழந்துவிட்டு முச்சந்தியில் நின்று சண்டை போடுவதை போல, ஆட்சியோடு சண்டை போட்டு கொண்டிருக்கிறார். அதனால், எங்களுக்கு ஒன்றும் நஷ்டமில்லை; கவர்னருக்கு லாபமுமில்லை.

எனவே, ஒரு அரசியல்வாதி போல பேசுவதை, கவர்னர் குறைத்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மணல் குவாரி புதியதாக திறக்க வாய்ப்பில்லை; எல்லா ஆறுகளிலும் நீர் ஓடுகிறது.

நான் அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்று கூறிய அண்ணாமலையின் நல் எண்ணத்துக்கு நன்றி. இவ்வாறு துரைமுருகன் கூறினார்.






      Dinamalar
      Follow us