sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் ஆட்சி மாற்றம் உறுதி: பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்

/

 எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் ஆட்சி மாற்றம் உறுதி: பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்

 எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் ஆட்சி மாற்றம் உறுதி: பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்

 எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் ஆட்சி மாற்றம் உறுதி: பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்

3


UPDATED : மார் 08, 2026 04:13 PM

ADDED : மார் 07, 2026 12:15 AM

Google News

3

UPDATED : மார் 08, 2026 04:13 PM ADDED : மார் 07, 2026 12:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பா.ஜ., மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம், சென்னை அமைந்தகரையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், பிரதமர் மோடியின் தமிழக வருகை, சட்ட சபை தேர்தல் பிரசாரம், தேர்தல் அறிக்கை வெளியீடு உள் ளிட்டவை குறித்து தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினார்.

பின், அவர் அளித்த பேட்டி:

அ.தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு குறித்து, வெகு விரைவில் பேச்சை துவங்குவோம்.

சட்டசபை தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை; இன்னும் நாட்கள் உள்ளன. பிரதமர் மோடியின் வருகை, தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சியை தந்துள்ளது.

தமி ழகத்தில், பெண்கள் நடமாட முடியாத அளவுக்கு, காட்டுத்தனமான, கஞ்சா ஆட்சி தான் நடக்கிறது. சொத்து வரி, மின் கட்டணம் உள்ளிட்டவை, ஆண்டுக்கு 300 மடங்கு அதிகரித்துள்ளன.

கிராமத் தில் உள்ள சாதாரண மக்களுக்கும், தி.மு.க., ஆட்சியின் அவலம் குறித்து தெரிந்துள்ளது.

எனவே, எத்தனை கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலும், தேர்தலுக்கு பின் ஆட்சி மாற்றம் உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us