தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'எனது இருக்கையில் யாரும் அமராமல் இருக்க வேண்டும்'

 'எனது இருக்கையில் யாரும் அமராமல் இருக்க வேண்டும்'

 'எனது இருக்கையில் யாரும் அமராமல் இருக்க வேண்டும்'


ADDED : செப் 01, 2026 02:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2026 02:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:

சபாநாயகர் பிரபாகர்: நான் அமருங்கள் என்று சொன்ன பிறகும், அரசு கொறடா எழுந்து முன்னோக்கி வருகிறார்.

எதிர்க்கட்சி கொறடா எ.வ.வேலு, எம்.எல்.ஏ.,க்களை கழுத்தை பிடித்து தள்ளுகிறார்; வயிற்றை பிடித்து தள்ளுகிறார். அவர்கள் செல்வதில்லை.

அ.தி.மு.க., கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறினாலும், அவரது பின்னால் நிற்பவர்கள் கையை உயர்த்தி முன்னோக்கி வருகின்றனர்.

ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும், தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களை, கொறடாக்கள் கட்டுப்படுத்த வேண்டும்.

தி.மு.க., - எ.வ.வேலு: சபாநாயகரின் கவனத்தை ஈர்ப்பதற்காக, எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து வருகின்றனர்.

சபாநாயகராக காளிமுத்து இருந்தபோது, நான் கையை துாக்கி பார்த்தேன்; சத்தம் போட்டு பார்த்தேன். பெஞ்ச் மேல் ஏறி நின்றதால், அவரது கவனத்தை ஈர்த்தேன். எனவே கையை உயர்த்துவது அவமதிப்பது ஆகாது.

சபாநாயகர்: பெஞ்ச் மேல் ஏறி நிற்கும் தண்டனையை, நான் கொடுக்க மாட்டேன். முன்பு நடந்ததுபோல, சபாநாயகர் இருக்கையில் யாரும் வந்து அமராமல் இருந்தால், மற்ற எல்லாவற்றையும் அனுமதிக்க தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us