sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மக்களுக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை; பொங்கல் விழாவில் பழனிசாமி பேச்சு

/

மக்களுக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை; பொங்கல் விழாவில் பழனிசாமி பேச்சு

மக்களுக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை; பொங்கல் விழாவில் பழனிசாமி பேச்சு

மக்களுக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை; பொங்கல் விழாவில் பழனிசாமி பேச்சு


ADDED : ஜன 15, 2025 05:19 AM

Google News

ADDED : ஜன 15, 2025 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: தை திருநாளையொட்டி, சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டசபை தொகுதி, அ.தி.மு.க., சார்பில், புத்துார் அக்ரஹாரத்தில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அக்கட்சி பொதுச்செயலர், பழனிசாமி 108 புதுப்பானைகளில் பொங்கலுக்கு அரிசியை போட்டு, கற்பூர ஆரத்தியுடன் சூரிய பகவானை வணங்கி, விழாவை தொடங்கி வைத்தார்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தார். கட்சி கொடி ஏற்றினார். ஈஸ்வரன் கோவிலில் கோ - பூஜை செய்து வழிபட்டார். தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய நடனமான, வள்ளி கும்மி ஆட்டத்தை பார்த்து ரசித்தார்.

பின், அவர் பேசியதாவது:

உலகுக்கே உணவு வழங்கும் உழவர்களுக்கான ஒரே பண்டிகை பொங்கல் திருவிழா. நானும் ஒரு விவசாயி என்ற வகையில், இந்த விழாவை உங்களுடன் கொண்டாடுகிறேன். தி.மு.க., 2021ல் பொய் வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்துவிட்டது. நான்காண்டுகளில் மக்களுக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை. முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் மட்டும் நலமாக, வளமாக உள்ளனர்.

நடப்பு 2025ம் ஆண்டு, தீயசக்தி தி.மு.க.,வை, வீட்டுக்கு அனுப்பும் ஆண்டாக அமையட்டும். 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அரசு அமைய, அனைவரும் உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில், அமைப்பு செயலர் செம்மலை, சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், எம்.எல்.ஏ.,க்களான, வீரபாண்டி ராஜமுத்து, தெற்கு பாலசுப்ரமணியன், ஏற்காடு சித்ரா, ஒன்றிய செயலர்களான, வீரபாண்டி வருதராஜ், வெங்கடேசன், பனமரத்துப்பட்டி ஜெகநாதன், பாலச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us