sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தலைமை செயலாளருக்கு அவமதிப்பு வழக்கில் நோட்டீஸ்

/

தலைமை செயலாளருக்கு அவமதிப்பு வழக்கில் நோட்டீஸ்

தலைமை செயலாளருக்கு அவமதிப்பு வழக்கில் நோட்டீஸ்

தலைமை செயலாளருக்கு அவமதிப்பு வழக்கில் நோட்டீஸ்


ADDED : செப் 16, 2011 11:12 PM

Google News

ADDED : செப் 16, 2011 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: அவமதிப்பு வழக்கில் பதிலளிக்க தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கிக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மதுரை எட்டிமங்கலம் வக்கீல் பி.ஸ்டாலின் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில், ''அரசு அலுவலகங்களில் தேச தலைவர்கள் படங்களை வைக்க கோரி ஏற்கனவே ரிட் மனு செய்தேன். அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தலைமை செயலாளர், பொது துறை செயலாளர்களுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அவர்கள் மீது அவமதிப்பு பிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என கோரினார். வழக்கு நீதிபதிகள் ஜோதிமணி, சுந்தரேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது 'அரசு விருந்தினர் மாளிகைகளில் முதல்வர் படத்துடன், தேச தலைவர்கள் படங்களையும் வைக்கலாமே?' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வேறு ஒரு வழக்கில் ஆஜராக வந்திருந்த அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், ''இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். பின், அவமதிப்பு குறித்து பதிலளிக்க தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us