sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கர்ப்பிணி விவகாரம் டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ்

/

கர்ப்பிணி விவகாரம் டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ்

கர்ப்பிணி விவகாரம் டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ்

கர்ப்பிணி விவகாரம் டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ்


ADDED : பிப் 08, 2025 12:23 AM

Google News

ADDED : பிப் 08, 2025 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று, ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணி துாக்கி வீசப்பட்ட சம்பவம் குறித்து, மூன்று நாட்களுக்குள் அறிக்கை அனுப்ப வேண்டும்' என, டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு, தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.

கடிதம் வருமாறு:

வேலுார் மாவட்டத்தில், ஓடும் ரயிலில் மகளிருக்கான பெட்டியில் பயணம் செய்த கர்ப்பிணியை, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று, அவரை துாக்கி வீசிய சம்பவத்திற்கு, தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவிக்கிறது.

இதுபோன்ற சம்பவங்களால், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கவலை அளிக்கிறது. குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். பி.என்.எஸ்., சட்ட விதிகளை பயன்படுத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையான எப்.ஐ.ஆர்., மற்றும் விரிவான அறிக்கையை, மூன்று நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

டி.ஜி.பி.,க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்








      Dinamalar
      Follow us