ADDED : பிப் 06, 2026 03:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழ்நாடு சத்துணவு மற்று ம் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி மற்றும் சத்துணவுப் பணியாளர்கள், நேற்று மூன்றாம் நாளாக, தமிழகம் முழுதும் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று நடந்த போராட்டத்தில், 36 மாவட்டங்களைச் சேர்ந்த, 22,000க்கும் அதிகமான ஊழியர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதனால், தமிழகம் முழுதும், 3,000 அங்கன்வாடி மையங்கள், 2,000 சத்துணவு மையங்கள் மூடப்பட்டு உள்ளன.

