sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கடத்தப்பட்ட முதியவர் நிலை என்ன? : கோர்ட்டில் ஒருவர் சரண்

/

கடத்தப்பட்ட முதியவர் நிலை என்ன? : கோர்ட்டில் ஒருவர் சரண்

கடத்தப்பட்ட முதியவர் நிலை என்ன? : கோர்ட்டில் ஒருவர் சரண்

கடத்தப்பட்ட முதியவர் நிலை என்ன? : கோர்ட்டில் ஒருவர் சரண்


ADDED : ஆக 05, 2011 01:24 AM

Google News

ADDED : ஆக 05, 2011 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே முதியவரை கடத்திய கார், கரூரில் கண்டுபிடிக்கப்பட்டது.

கடத்தப்பட்டவர் நிலை கேள்விக்குறியாக உள்ளது. தேனி தேவதானப்பட்டியை சேர்ந்த மீராமைதீனுக்கு, 62, சொந்தமான தோட்டம், பன்றிமலை அடிவாரத்தில் உள்ளது. இதற்கு பாதை கேட்டதால், மீரா மைதீனுக்கும், சிலருக்கும் பிரச்னை ஏற்பட்டது. கடந்த 3 ம் தேதி, காரில் வந்த கும்பல், அவரை கடத்தி சென்றது. நிலத்தகராறில் அன்புமணி, சரவணன், ஜீவானந்தம், பாலமுருகன், ஈஸ்வரி, கருப்பையா, ஜோதிமுருகன், ஞானசேகர், ராஜூ, வனசேகர் ஆகியோர் கடத்தி சென்றதாக, மகன் புகார் கொடுத்தார். வனசேகர் மகன் ராஜசேகரை, கன்னிவாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.



நேற்று முன்தினம், கரூர் கோர்ட்டில், ராஜசேகரின் மாமா செந்தில் சரணடைந்தார். கடத்தலுக்கு பயன்பட்ட சுமோ கார் (டி.என்.39.எச்.1121), கரூரில் கைப்பற்றப்பட்டது. ஆனால் மீராமைதீன் நிலை தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் கூறியது: வனசேகர் தோட்டத்தை கடந்து தான் மற்ற தோட்டங்களுக்கு செல்ல வேண்டும். அவரிடம் பாதை கேட்டு மீராமைதீன் போராடியுள்ளார். கடத்தல் கும்பலை நெருங்கி விட்டோம், என்றனர்.








      Dinamalar
      Follow us