ADDED : ஆக 26, 2026 03:24 AM
சென்னை: ''தென் மாவட்டங்களில் ஜாதி கலவரங்கள் நடக்காமல் இருக்க, விளையாட்டை ஊக்குவிக்க, திருநெல்வேலி, பரமக்குடி போன்ற ஊர்களில், சர்வதேச தரத்தில் ஒலிம்பிக் மையங்கள் உருவாக்கப்படும்,'' என, விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:
தி.மு.க., - கதிரவன்: பரமக்குடி நகரை சேர்ந்த கபடி, தடகளம், கூடைப்பந்து போட்டி வீரர்கள், மாநில, மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்கள், பரமக்குடியில் ஒரு நவீன வசதியுடன் கூடிய விளையாட்டு அரங்கம் இல்லாமல், பயிற்சியை மேம்படுத்துவதில் பிரச்னை இருக்கிறது.
பரமக்குடி தொகுதிக்கு, நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு அரங்கம் அமைத்து தர வேண்டும்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: பரமக்குடியில், 10, 15 ஆண்டுகளாக கூடைப்பந்து போட்டியில் பங்கேற்று உள்ளேன். 10 ஒலிம்பிக் மையங்களை உருவாக்க உள்ளோம். ராமநாதபுரத்திற்கான மையம், பரமக்குடியில் தான் வரப் போகிறது.
தென் மாவட்டங்களில் ஜாதி கலவரங்கள் நடக்காமல் இருக்க, விளையாட்டை அதிகப்படியாக ஊக்குவிக்க, திருநெல்வேலி, பரமக்குடி போன்ற ஊர்களில், சர்வதேச தரத்தில் ஒலிம்பிக் மையங்கள் உருவாக்கப்படும்.
தென் மாவட்டங்களில் ஜாதி கலவரங்கள் நடக்காமல் இருக்க, அதிகப்படியான விளையாட்டு போட்டிகளும், விளையாட்டு திட்டங்களும், மிகப்பெரிய வசதிகளும் உருவாக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
