விஜயதசமி நன்னாளில் வித்யாரம்பம் 'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம் மழலையருக்கான முன்பதிவு துவக்கம்
விஜயதசமி நன்னாளில் வித்யாரம்பம் 'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம் மழலையருக்கான முன்பதிவு துவக்கம்
ADDED : செப் 07, 2025 01:21 AM

சென்னை:'தினமலர்' மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் சார்பில் நடத்தப்படும், 'அரிச்சுவடி ஆரம்பம்' என்ற, குழந்தைகளின் கல்விக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க, ஆர்வமுள்ள பெற்றோர் முன்பதிவு செய்யத் துவங்கி உள்ளனர்.
வித்யாரம்பம் நெல் மணியில், குழந்தையின் கையால் அகரம் எழுதி, வித்யாரம்பம் செய்வது, விஜயதசமி நன்னாளில் தான்.
அந்த நாளில், நம் நாளிதழ் சார்பில், 'அரிச்சுவடி ஆரம்பம்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், கல்வியாளர்கள், பல்துறை வல்லுநர்கள், கலைஞர்கள் பங்கேற்று, குழந்தைகளின், 'அ'கரத்தை துவக்கி வைக்க உள்ளனர்.
எங்கெங்கு? சென்னை, படப்பை வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி வளாகம், வடபழனி ஆண்டவர் கோவில், கேளம்பாக்கம் வேலம்மாள் நியூ ஜென் பள்ளி, தாம்பரம் ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சூரப்பேட் வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி வளாகம் ஆகிய ஐந்து இடங்களில், அக்., 2ம் தேதி, காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடக்க உள்ளது.
நிகழ்ச்சியில், உங்கள் வீட்டில் உள்ள இரண்டரை வயது முதல், மூன்றரை வயது உள்ள குழந்தைகளை அழைத்து வந்து, வித்யாரம்பம் துவக்கலாம். இதற்கான முன்பதிவு தற்போது துவங்கி, விறு விறுப்பாக நடக்கிறது.
முன்பதிவு செய்ய, இந்த செய்தியில் உள்ள, 'கியூஆர் கோடு' குறியீடை 'ஸ்கேன்' செய்து, அதில் உங்களுக்கு அருகில் உள்ள பகுதியை தேர்வு செய்து, குழந்தை குறித்த விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.
இதில் பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும், தலா 1,000 ரூபாய் மதிப்புள்ள டி - ஷர்ட்டுடன், 'லேர்னிங் கிட்' மற்றும் குழந்தை அரிச்சுவடி எழுதும் புகைப் படத்துடன் கூடிய சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு, 81229 71772, 81483 01771 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சியின் சேனல் பார்ட்னர், 'ஜனம் தொலைக்காட்சி'.