sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


ADDED : நவ 25, 2024 12:23 AM

Google News

ADDED : நவ 25, 2024 12:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவம்பர் 25, 1964

கர்நாடக மாநிலம் பெங்களூரில், 1893, நவம்பர் 8ல் பிறந்தவர் துவாரம் வேங்கடசாமி நாயுடு.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வளர்ந்த இவரின் அண்ணன் வெங்கடகிருஷ்ணய்யா, வயலின் வித்வான். இவரின் பார்வை குறைபாட்டை சக மாணவர்கள் கேலி செய்ததால், பள்ளிக்கு செல்லவில்லை. அண்ணனிடம் நேரடியாகவும், வீணை சேஷண்ணா, சங்கமேஸ்வர சாஸ்திரி, கோனேரிராஜபுரம் வைத்தியநாத அய்யர் உள்ளிட்டோரின் கச்சேரிகளை கேட்டு, தீவிர பயிற்சி செய்தார். விஜயநகரம் மகாராஜா இசைக் கல்லுாரியில் சேரச் சென்ற இவரின் வாசிப்பைக் கேட்ட கல்லுாரி நிர்வாகம், இவரை பேராசிரியராக்கியது. சென்னை காங்கிரஸ் மாநாட்டில் வாசித்ததால் பிரபலமானார்.

காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளை, அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், பல்லடம் சஞ்சீவிராவ், முசிறி சுப்பிரமணிய அய்யர் ஆகியோருக்கு பக்கவாத்தியம் வாசித்தார். வானொலி இசைக்கலைஞராக, இசைத்தட்டுகளின் வாயிலாக புகழ் பெற்றார். முதலில் தனி வயலின் கச்சேரியை, வேலுாரில் அறிமுகம் செய்தார். தனித்த இசை பாணியை கடைபிடித்ததுடன், இசை நுணுக்கங்களை கட்டுரைகளாகவும் எழுதினார். 'சங்கீத கலாநிதி, சங்கீத நாடக அகாடமி, பத்மஸ்ரீ' உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற இவர், தன், 71வது வயதில்,1964ல், இதே நாளில் மறைந்தார்.

இசைக்கலைஞரின் நினைவு தினம் இன்று!






      Dinamalar
      Follow us