sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


ADDED : ஜன 08, 2024 12:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2024 12:31 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜனவரி 8, 1847

இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள மட்டுவில், கணபதிப்பிள்ளை உடையார் - உமா மகேஷ்வரி தம்பதியின் மகனாக, 1847ல், இதே நாளில் பிறந்தவர், ம.க.வேற்பிள்ளை.

இவர் சிறுவயதிலேயே தாய்வழி உறவினரான சண்முகம் சட்டம்பியாரிடம் கல்வி கற்றார். தொடர்ந்து, நல்லுார் கார்த்திகேய ஆசிரியரிடமும், ஆறுமுக நாவலரிடமும் மரபுவழி கல்வியை பெற்றார். யாழ்ப்பாணத்தில் கல்வி நிலையம் நடத்தி வந்த இவர், சென்னை வந்து, 'வித்துவசிரோமணி' பொன்னம்பலம் பிள்ளையிடம் கல்வி கற்றார். சென்னை மற்றும் சிதம்பரத்தில் செயல்பட்ட நாவலர் பாடசாலை யில் ஆசிரியராக பணியாற்றினார்.

இவர், 'ஈழ மண்டல சதகம், புலோலி வயிரவக் கடவுள் தோத்திரம், புலோலி பர்வதபத்தினியம்மை தோத்திரம், ஆருயிர் கண்மணிமாலை என்னும் செய்யுள்' உள்ளிட்ட இலக்கியங்களை இயற்றினார். ஒரே பொருள் பற்றி, நுாறு செய்யுள்களில் பாடும் முறையில் அமைந்த, ஈழ மண்டல சதகத்தை, தமிழகத்தில் உள்ள சிதம்பரத்தில் அரங்கேற்றி, 'பிள்ளைப் புலவர்' எனும் பட்டம் பெற்றார்.

'திருவாதவூரடிகள் புராணம், புலியூரந்தாதி, அபிராமி அந்தாதி, கெவுளி நுால்' உள்ளிட்ட நுால்களுக்கு உரை எழுதினார். 'வேதாரணிய புராணம், சிவகாமியம்மை சதகம்' உள்ளிட்ட நுால்களை பதிப்பித்தார். இவர் தன், 82வது வயதில், 1930, பிப்ரவரி, 17ல் மறைந்தார்.

'உரையாசிரியர்' எனப் புகழப்பட்ட, 'தமிழறிஞர், ம.க.வே' பிறந்த தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us