sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


ADDED : பிப் 05, 2024 09:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2024 09:20 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிப்ரவரி 6, 1827

தஞ்சாவூர் மாவட்டம், திருவாரூரில், 1762 ஏப்ரல் 26ல் பிறந்தவர் வெங்கட சுப்பிரமணிய ஷர்மா எனும் சியாமா சாஸ்திரி.

தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற இவர், தன் மாமனாரிடம் சங்கீதம் கற்றார். சங்கீத சுவாமிகள் என்ற குருவிடம் தாள சாஸ்திர மர்மங்கள், நடை பேத கிரமங்களை கற்றார்.

பின், மாஞ்சி, கல்கட, கர்னாடக, காபி, சிந்தாமணி உள்ளிட்ட அரிய ராகங்களில், மும்மொழிகளிலும், 300க்கும் மேற்பட்ட சங்கதிகளை இயற்றினார். பங்காரு காமாட்சி அம்மனின் பக்தரான இவர், வெள்ளிக்கிழமைகள் மற்றும் விசேஷ நாட்களில், காமாட்சி அம்மன் கோவிலில் அமர்ந்து மனமுருகி பல பாடல்களை பாடினார்.

இவரின் பல தெலுங்கு கீர்த்தனைகள் புகழ் பெற்றவை. மீனாட்சி அம்மனை பற்றி, 'நவரத்தின மாலை' எனும் தலைப்பில் ஒன்பது கிருதிகளை பாடிய இவர், 1827ல், தன் 65வது வயதில் இதே நாளில் மறைந்தார். இவரின் நினைவாக, அஞ்சல் துறை, 1985ல் தபால் தலையை வெளியிட்டது.

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் மூன்றாமவர் மறைந்த தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us