sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


ADDED : பிப் 08, 2024 09:52 PM

Google News

ADDED : பிப் 08, 2024 09:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிப்ரவரி 9, 1919

தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில் சச்சிதானந்தம் பிள்ளை - கமலாம்பாள் தம்பதிக்கு 10வது குழந்தையாக, 1919ல் இதே நாளில் பிறந்தவர் சோமசுந்தரம் எனும் சோமு.

இவரது தந்தைக்கு, மதுரை நீதிமன்றத்தில் வேலை கிடைத்ததால், அங்கு குடியேறினர். இசைக் குடும்ப பாரம்பரியத்தில் வந்ததால், சென்னை வந்து, சித்துார் சுப்பிரமண்ய பிள்ளையிடம், 14 ஆண்டுகள் கர்நாடக சங்கீதத்தையும், மிருதங்கம், கஞ்சிரா வாசிப்பையும் கற்றார். 1934ல், திருச்செந்துாரில் தன் முதல் கச்சேரியை செய்தார்.

தொடர்ந்து, ஏழு மணி நேரம் வரை கச்சேரி செய்வதில் வல்லவரான இவர், வள்ளலாரின் அருட்பா, சீர்காழி மூவரின் பாடல்கள், ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் பாடல்கள், பாரதியார் பாடல்கள், திருப்புகழ் உள்ளிட்ட தமிழ் பாடல்களையும் பாடினார்.

இவருக்கு, தமிழ் இசை சங்கத்தின் 'இசைப் பேரறிஞர்' பட்டம், மத்திய அரசின், 'பத்மஸ்ரீ' உள்ளிட்ட விருது வழங்கப்பட்டன. தன், 70வது வயதில், 1989 டிசம்பர் 9ல் மறைந்தார்.

தெய்வம் படத்தில், 'மருதமலை மாமணியே முருகையா' என்ற கணீர் குரலால், முருக பக்தர்களை மயக்கிய, மதுரை சோமு பிறந்த தினம் இன்று!






      Dinamalar
      Follow us