sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


ADDED : பிப் 15, 2024 10:08 PM

Google News

ADDED : பிப் 15, 2024 10:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிப்ரவரி 16, 2006

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணிக்கு அருகில் உள்ள, குருவிக்கரம்பை கிராமத்தில், 1942ல் பிறந்தவர் சண்முகம்.

முனைவர் பட்டத்துடன், தமிழ் இலக்கியம் படித்த இவர், சென்னை பச்சையப்பன் கல்லுாரியின் தமிழ் துறை தலைவராக பணியாற்றினார். மரபு கவிதைகள், புதுக்கவிதைகள் எழுதுவதில் வல்லவரான இவர், 'நினைவுச்சின்னம், பாட்டுப்பறவை, ஒரு குயிலின் குரல்' உள்ளிட்ட கவிதை நுால்களையும், சில ஆய்வு நுால்களையும் எழுதினார்.

கோவையில், இவர் பங்கேற்ற கவியரங்கத்திற்கு தலைமை வகித்த, திரைப்பட இயக்குனர் பாக்யராஜ், அந்த 7 நாட்கள் படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பை வழங்கினார். 'கவிதை அரங்கேறும் நேரம்' என்ற பாடலின் வாயிலாக, தமிழ் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானார்.

தொடர்ந்து, டார்லிங்... டார்லிங்... டார்லிங், தாவணிக்கனவுகள், கன்னி ராசி, ஆண் பாவம் உள்ளிட்ட படங்களில் பாடல்கள் எழுதியதுடன், பாண்டியராஜன் நடிப்பில், மாப்பிள்ளை மனசு பூ போல என்ற படத்தையும் தயாரித்தார்.

இவர், 2006ல் தன், 64வது வயதில், இதே நாளில் மறைந்தார். 'பாரதியார் விருது' பெற்ற பாடலாசிரியரின் நினைவு தினம் இன்று!






      Dinamalar
      Follow us