sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆபரேஷன் சிந்துார் ஒரு திருப்பு முனை நிகழ்வு: தமிழக கவர்னர் புகழாரம்

/

ஆபரேஷன் சிந்துார் ஒரு திருப்பு முனை நிகழ்வு: தமிழக கவர்னர் புகழாரம்

ஆபரேஷன் சிந்துார் ஒரு திருப்பு முனை நிகழ்வு: தமிழக கவர்னர் புகழாரம்

ஆபரேஷன் சிந்துார் ஒரு திருப்பு முனை நிகழ்வு: தமிழக கவர்னர் புகழாரம்

5


ADDED : ஜூன் 22, 2025 10:13 PM

Google News

ADDED : ஜூன் 22, 2025 10:13 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'ஆபரேஷன் சிந்துார்' இந்திய வரலாற்றில் ஒரு திருப்பு முனை நிகழ்வாக இருந்து வருகிறது என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டினார்.

பஹல்காம் சம்பவத்தை தொடர்ந்து 'ஆபரேஷன் சிந்துார்' மூலம் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ஆயுதப்படை வீரர்களை கவுரவிக்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசினார்.

தமிழக கவர்னர் ரவி பேசியதாவது:

'இந்திய வரலாற்றில் 'ஆபரேஷன் சிந்தூர்' ஒரு திருப்புமுனை நிகழ்வாக இருந்து வருகிறது. நமது பிரதமர் மோடி, 'இது ஒரு எழுச்சி பெறும் புதிய இந்தியாவின் இடிமுழக்கம் என பாராட்டினார்,இது பல வழிகளிலும், குறிப்பாக பயங்கரவாதத்தை எவ்வாறு எதிர்ப்பது என்பது குறித்து ஒரு திருப்புமுனை இயக்கமாக இருந்தது' என்றார்.

அதன்படி,பயங்கரவாத எதிர்ப்பு உத்திகளில், இந்திய ராணுவ திறன் மற்றும் தீர்மானத்தையும், உலகளாவிய பாதுகாப்பு கவலைகளுக்கு எதிரான தயார் நிலையையும் உறுதிப்படுத்தியது.பயங்கரவாதம் மற்றும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் நமது தீர்மானத்தின் அடையாளமாக காணப்பட்டது.

பயங்கரவாத சக்திகளுக்கு எதிரான துணிச்சலான நடவடிக்கை என்பதால், இது இந்திய பாதுகாப்பு உத்தியில் ஒரு புதிய அத்தியாயம் என்று கருதப்படுகிறது.

இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.






      Dinamalar
      Follow us