கவர்னருக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் தி.மு.க.,வினர் போராட்டம்
கவர்னருக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் தி.மு.க.,வினர் போராட்டம்
ADDED : ஜன 07, 2025 10:32 AM

சென்னை: சட்டசபையை கவர்னர் ரவி அவமதித்ததாக கூறி, தமிழகம் முழுவதும், இன்று (ஜன.,07) தி.மு.க., வினர் போராட்டம் நடத்தினர். சைதாப்பேட்டையில் நடந்த போராட்டத்தில், தி.மு.க., எம்.பி., கனிமொழி, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழகத்தில், அத்துமீறும் கவர்னரையும், அவரை காப்பாற்றும், அ.தி.மு.க., -- பா.ஜ., கள்ளக் கூட்டணியையும் கண்டித்து, தி.மு.க., சார்பில், இன்று அனைத்து மாவட்டங்களிலும், கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும்' என, அக்கட்சியின் அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி அறிவித்து இருந்தார்.
அதன்படி, இன்று (ஜன.,07) தமிழகம் முழுவதும், சட்டசபையை கவர்னர் ரவி அவமதித்ததாக கூறி, இன்று (ஜன.,07) தி.மு.க., வினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஏராளமான தி.மு.க., வினர் பங்கேற்றனர்.
சைதாபேட்டையில், நடந்த போராட்டத்தில் தி.மு.க., எம்.பி., கனிமொழி, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது மாநில அரசை மதிக்காத, கவர்னர் ரவி திரும்ப பெற வேண்டும் என தி.மு.க.,வினர் வலியுறுத்தினர்.

