sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 தேவநாதனை கைது  செய்ய உத்தரவு

/

 தேவநாதனை கைது  செய்ய உத்தரவு

 தேவநாதனை கைது  செய்ய உத்தரவு

 தேவநாதனை கைது  செய்ய உத்தரவு


ADDED : நவ 14, 2025 03:08 AM

Google News

ADDED : நவ 14, 2025 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை, மயிலாப்பூரில், 'தி ஹிந்து பெர்மனன்ட் பண்ட்' என்ற நிதி நிறுவனத்தில், முதலீட்டாளர்களிடம் இருந்து, 24.50 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அதன் இயக்குனர் தேவநாதன் உள்ளிட்டோர் மீது, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

தேவநாதன் உட்பட ஆறு பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

தேவநாதன் உள்ளிட்டோர், மூன்றாவது முறையாக தாக்கல் செய்த ஜாமின் மனுவை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், '100 கோடி ரூபாயை விசாரணை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும்' என்ற நிபந்தனையுடன், இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

ஜாமின் நிபந்தனைகளை நிறைவேற்றாததால், தேவநாதனை உடனே கைது செய்ய, காவல் துறைக்கு சிறப்பு நீதிமன்றமும் உத்தரவிட்டது. ஜாமின் நிபந்தனைகளை மாற்றியமைக்க கோரி, தேவநாதன் தாக்கல் செய்த மனு, உயர் நீதிமன்ற நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, முதலீட்டாளர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர் அஸ்வின்குமார், அரசு ஆகியோர் ஆஜராகி எதிர்ப்பு தெரிவித்தனர். அதை ஏற்று, தேவநாதனின் மனுவை தள்ளுபடி செய்து, அவரை உடனே கைது செய்ய, பொருளாதார குற்றப் பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us