ADDED : அக் 03, 2025 04:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரியில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசியதாவது:
கரூரில் துயர சம்பவம் நடந்து விட்டது. முதல்வர் இரவோடு இரவாக வந்து ஆறுதல் சொன்னார் சரி. துணை முதல்வர் உல்லாசமாக வெளிநாடு போய் விட்டார். இங்கே நாடு பத்தி எரிஞ்சிக்கிட்டு இருக்கு, நாட்டு மக்கள் பதறிக்கொண்டு இருக்கிறார்கள்.
உடனே, தனி விமானம் பிடித்து வருகிறார், பார்த்தார், மீண்டும் விமானம் ஏறி போய் விட்டார். இவரெல்லாம் ஆண்டால், நாடு உருப்படுமா?
மக்கள் உயிரிழந்து துடிக்கும் நேரத்தில் கூட, இவர்களுக்கு இரக்கம் இல்லை. உல்லாச சுற்றுப்பயணம் தான் முக்கியம்.
இவ்வாறு அவர் பேசினார்.