UPDATED : ஏப் 05, 2024 02:44 PM
ADDED : ஏப் 05, 2024 06:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகம் முழுதும் அ.தி.மு.க.,வுக்கு சாதகமான சூழல் நிலவுவதாக மிகுந்த சந்தோஷத்தில் இருக்கும் அக்கட்சியின் பொதுச் செயலர் பழனிசாமி, சொந்த ஊருக்குள்ளேயே இருந்து கொண்டு தி.மு.க., சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செல்வகணபதியைக் கண்டு நடுங்குவதாக, அ.தி.மு.க.,வினர் பரபரப்பாகப் பேசுகின்றனர்.
இதுகுறித்து, அக்கட்சி லோக்கல் நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த சில மாதங்களுக்கு முன், பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகிய பழனிசாமி, தன் தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கலாம் என நினைத்தார். காங்., வி.சி.,க்கள், தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகி, அ.தி.மு.க., பக்கம் வருவர் என எதிர்பார்த்தார். அதற்காக பல நாட்கள், கூட்டணியை இறுதி செய்யாமல் பொறுமை காத்தார்.

