sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.25 லட்சம் நிவாரணம் பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

/

ரூ.25 லட்சம் நிவாரணம் பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

ரூ.25 லட்சம் நிவாரணம் பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

ரூ.25 லட்சம் நிவாரணம் பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


ADDED : டிச 14, 2024 09:52 PM

Google News

ADDED : டிச 14, 2024 09:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:

இலங்கை கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, திருவெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலைக்கு கால்வாய்களை துார்வாராததும், ஆக்கிரமிப்புகளும்தான் காரணம் என்று, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். திருச்சுழி, காளையார்குளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக, நெற்பயிர் மற்றும் இதர பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.

திருச்சி, திருப்பூர், ராமநாதபுரம், பொள்ளாச்சி போன்ற பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், மீட்பு பணி மற்றும் நிவாரணப் பணிகள் மந்த கதியில் நடக்கின்றன. குடிசைகள், வீடுகள், உடமைகள், வாகனங்கள் உள்ளிட்டவைக்கு, சேதத்திற்கு ஏற்ப நிவாரணத் தொகை மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us