sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'இண்டியா கூட்டணியில் கட்சிகள் வெளியேற தயார்'

/

'இண்டியா கூட்டணியில் கட்சிகள் வெளியேற தயார்'

'இண்டியா கூட்டணியில் கட்சிகள் வெளியேற தயார்'

'இண்டியா கூட்டணியில் கட்சிகள் வெளியேற தயார்'


ADDED : ஜன 29, 2024 05:40 AM

Google News

ADDED : ஜன 29, 2024 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல் : பிரதமர் மோடி, மன் கீ பாத் என்ற நிகழ்ச்சியில், ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை, வானொலி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். இதை தமிழில் மொழிபெயர்த்து, நாமக்கல் நகர பா.ஜ., சார்பில், நாமக்கல்லில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று ஒளிபரப்பு செய்தனர். இந்நிகழ்ச்சியில், மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் முருகன் பங்கேற்றார்.

அப்போது, அவர் கூறியதாவது: 'இண்டியா' கூட்டணி மக்களை குழப்பும் கூட்டணி. அதை நிரூபிக்கும் வகையில், தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே, மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சிகள் தனியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. தற்போது, பீஹாரில் நிதீஷ்குமாரும்கூட்டணியை மாற்றிஉள்ளார்.

தமிழகத்தில், 'இண்டியா'கூட்டணியில் உள்ள சில கட்சிகள் வெளியேற தயாராகி வருகின்றன. வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து, 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அகில இந்திய அளவில், 400க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று, பிரதமர் மோடி மூன்றாவது முறையாக இந்திய பிரதமராவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us