sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கடற்கரை-செங்கை 'ஏசி' மின்சார ரயில் அட்டவணை மாற்றம் கோரும் பயணியர்

/

கடற்கரை-செங்கை 'ஏசி' மின்சார ரயில் அட்டவணை மாற்றம் கோரும் பயணியர்

கடற்கரை-செங்கை 'ஏசி' மின்சார ரயில் அட்டவணை மாற்றம் கோரும் பயணியர்

கடற்கரை-செங்கை 'ஏசி' மின்சார ரயில் அட்டவணை மாற்றம் கோரும் பயணியர்

5


ADDED : ஏப் 22, 2025 05:05 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 05:05 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் இயக்கப்படும் புறநகர், 'ஏசி' ரயிலில், பயணியர் வசதிக்கு ஏற்ப கால அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை ஐ.சி.எப்., ஆலையில் தயாரிக்கப்பட்ட, 12 பெட்டிகள் கொண்ட, 'ஏசி' ரயிலில், அமர்ந்தபடி 1,116 பேர், நின்றபடி 3,798 பேர் என, 4,914 பேர் பயணிக்கலாம்.

இந்த 'ஏசி' ரயில் கடந்த 19ம் தேதி, கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் சேவையை துவக்கியது. சென்னை கடற்கரையில் இருந்து காலை 7:00, பிற்பகல் 3:45 மற்றும் இரவு 7:35 மணிக்கு புறப்படும் ரயில், முறையே காலை 8:35, மாலை 5:25 மணிக்கு செங்கல்பட்டு சென்றடைகிறது

செங்கல்பட்டில் இருந்து காலை 9:00, மாலை 5:45 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரைக்கு காலை 10:30, இரவு 7:15 மணிக்கு வந்தடையும். தாம்பரத்தில் அதிகாலை 5:45 மணி ரயில், காலை 6:45 மணிக்கு கடற்கரைக்கு இயக்கப்படுகிறது.

இந்த ரயில் சேவைக்கு, பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இருப்பினும், அதிக அளவில் பயணியர் பயன்பெற, கால அட்டவணையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, ரயில் பயணியர் சங்கங்களின் நிர்வாகிகள் பாஸ்கர், முருகையன் ஆகியோர் கூறியதாவது:

சென்னையில் முதல் முறையாக, 'ஏசி' மின்சார ரயில்சேவை துவங்கி இருப்பது வரவேற்கத்தக்கது.

தற்போதுள்ள கால அட்டவணையில், சில மாற்றங்களை செய்ய வேண்டும்.

காலை 7:45 மணிக்கு கடற்கரையில் புறப்படும் முதல் சேவையை, செங்கல்பட்டில் இருந்து துவக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தென்மாவட்ட விரைவு ரயில், சென்னை நோக்கி வரும் போது, பயணியர் செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்தில் இறங்கி, இந்த 'ஏசி' ரயிலில் பயணிக்க முடியும்.

தற்போது காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் மட்டுமே 'ஏசி' ரயில் செல்கிறது. இதை மாற்றி, வெயில் அதிகமாக இருக்கும் மதிய நேரங்களிலும் இயக்கினால், பயனுள்ளதாக இருக்கும்.

அதுபோல், சென்ட்ரல் - ஆவடி - அரக்கோணம் தடத்திலும், புறநகர், 'ஏசி' ரயில் சேவை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பயணியர் விருப்பப்படி மாற்றம்

சென்னையில் ஓடும் முதல், 'ஏசி' மின்சார ரயில் சேவை குறித்தும், மேம்பாடு குறித்தும், பயணியரிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. பயணியர் தெரிவிக்கும் கருத்துகளை ஆராய்ந்து, கால அட்டவணை மாற்றம் உள்ளிட்ட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டாவது மின்சார, 'ஏசி' ரயில் வரும்போது, அரக்கோணம் தடத்தில் இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.

- தெற்கு ரயில்வே அதிகாரிகள்.






      Dinamalar
      Follow us