sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயார்: பழனிசாமி

/

தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயார்: பழனிசாமி

தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயார்: பழனிசாமி

தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயார்: பழனிசாமி

13


ADDED : ஜூலை 21, 2025 12:50 AM

Google News

13

ADDED : ஜூலை 21, 2025 12:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப, மக்கள் உறுதி ஏற்று விட்டனர்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும் கூறியதாவது:

'மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில், 31 சட்டசபை தொகுதிகளில், 12.50 லட்சம் மக்களை சந்தித்துள்ளேன். அனைத்து தரப்பினரும், 52 மாத கால, முதல்வர் ஸ்டாலினின் 'பெயிலியர் மாடல்' ஆட்சியில், அவர்கள் சந்தித்து வந்த வேதனைகளை எடுத்துரைத்தனர்.

தி.மு.க., ஆட்சி, பல பொய்களை மட்டுமே கூறி, மக்களை மடைமாற்றம் செய்து, வஞ்சித்து கொண்டிருக்கிறது.

மக்கள் நலனை தள்ளி வைத்துவிட்டு, தமிழகத்தை கொள்ளை அடிப்பதில் மட்டுமே, முதல்வரும், அவரது அமைச்சரவை சகாக்களும் குறியாக இருக்கின்றனர். அமைச்சர் நேரு, எனது பயணத்தை தவறாக சித்தரித்து, அவதுாறு பரப்பி இருக்கிறார்.

ஆனால், உண்மை என்னவென்றால், அறிக்கை என்ற பெயரில், அமைச்சர் நேருவை விட்டு, ஸ்டாலின் ஆழம் பார்த்துள்ளார். 'மருமகனை காப்போம். மகனை காப்போம்.

ரியல் எஸ்டேட் வாயிலாக தமிழகத்தை கூறு போட்டு விற்போம். போதை பழக்கத்தை பரப்புவோம். இயற்கை வளங்களை சுரண்டுவோம்.

கோடிக் கணக்கில் கொள்ளை அடிப்போம். சொத்துக்களை வெளிநாட்டில் முதலீடு செய்து, ஊழல் பணத்தை தமிழகத்திற்கு கொண்டு வருவோம்' என்ற, முதல்வரின் எண்ணத்தை கூறும் விதமாகவே, அமைச்சர் நேருவின் பேச்சு உள்ளது.

ஸ்டாலின் என்ன மடைமாற்றம் செய்தாலும், எனது எழுச்சி பயணம் தொடரும். தவறு செய்த தற்போதைய ஆட்சியாளர்கள் அனைவரும், அதற்கு தக்க பதில் சொல்ல வேண்டிய நிலை வரும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us