தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கோவையில் மக்கள் ரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர் கோவை மாமன்றத்தில் ஆளும்கட்சி எம்.பி., ஆவேசம்

கோவையில் மக்கள் ரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர் கோவை மாமன்றத்தில் ஆளும்கட்சி எம்.பி., ஆவேசம்

கோவையில் மக்கள் ரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர் கோவை மாமன்றத்தில் ஆளும்கட்சி எம்.பி., ஆவேசம்


ADDED : பிப் 07, 2025 10:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2025 10:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:''கோவை மாநகராட்சியில், மக்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர்,'' என, எம்.பி., ராஜ்குமார் பேசினார்.

கோவை மாநகராட்சியில் நேற்று நடந்த மாமன்ற கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக, தி.மு.க., - எம்.பி., ராஜ்குமார் பங்கேற்றார்.

மன்றத்தில், அவர் பேசியதாவது:

கோவையில் செல்லும் இடங்களில் எல்லாம் 'ட்ரோன் சர்வே' பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண் கூறும்போது, 'கார்ப்பரேஷன்ல இருந்து வர்றாங்க... 'ஏரோபிளேன்' பறக்க விடுறாங்க... அளவீடு செய்கிறார்கள். சொத்து வரி பல மடங்கு உயர்ந்திருக்கிறது என கூறுகிறார்கள். கேட்டால் மிரட்டுகிறார்கள்' என புலம்புகிறார்.

அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்கிறேன்; பில் கலெக்டர்களின் ஆட்டத்தை குறைத்து வையுங்கள். (மேஜையை தட்டி கவுன்சிலர்கள் ஆரவாரம்) கீழ்மட்டத்தில் நடக்கும் விஷயங்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் கமிஷனரின் பார்வைக்கு வருவதில்லை.

பில் கலெக்டர்களின் செயல் இதேபோல் சென்றால், அமைச்சர் மற்றும் மேலிடத்தில் பேசி, அவர்கள் கூண்டோடு மாற்றப்படுவர். அதற்கான முன்னெடுப்பை செய்வது நானாகவே இருப்பேன். (மேஜையை தட்டி கவுன்சிலர்கள் ஆரவாரம்)

அப்பாவி மக்கள், ரத்தக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு கமிஷனர் விரைந்து தீர்வு காண வேண்டும். கீழ்மட்டத்தில் நடக்கிற சீர்கேட்டினால், நிர்வாகத்துக்கும், அரசுக்கும் கெட்டப்பெயர்.

சூயஸ் என்ற நிறுவனம், தனியாக ஒரு நிர்வாகத்தை கோவை மாநகராட்சியில் செய்து கொண்டிருக்கிறது. மாநகராட்சியில் திறமையான அதிகாரிகள் இருக்கின்றனர். அவர்களால் முறையாக தண்ணீர் விநியோகத்தை செய்ய முடியாதா?

சூயஸ் நிறுவனத்தினரை யாராலும் கட்டுப்படுத்த முடிவதில்லை. ரோடுகளை தோண்டி போட்டு மாதக்கணக்கில் மூடுவதில்லை. யார் சொன்னாலும் கேட்பதில்லை. மாநகராட்சி அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியாது என்றால், அவ்வளவு பலம் வாய்ந்ததா சூயஸ் நிறுவனம்?

இதே நிலை நீடித்தால், தேர்தலுக்குள் ரோடு பணியை முடிக்க முடியாது. இன்னும் ஒரு ஆண்டுக்கு ரோடுகளை தோண்ட வேண்டாம். வீட்டு இணைப்பு கொடுக்கிறோம் என கூறி, கூத்தடிக்க வேண்டாம்; நாங்கள் தேர்தலை சந்திக்க வேண்டும்.

இவ்வாறு, எம்.பி., ராஜ்குமார் பேசினார்.

வரி போடுறாங்க'@


நிருபர்களிடம் எம்.பி., ராஜ்குமார் கூறுகையில், ''தோண்டப்பட்ட சாலைகள் உடனடியாக சீரமைக்கப்படுவது இல்லை; மிகப்பெரிய தாமதம் ஏற்படுகிறது. சூயஸ் நிறுவனம் யாருக்கு கட்டுப்படும் என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. மக்கள் செல்லும் இடம் எல்லாம் பிரச்னையாக உள்ளது. மக்கள் ஒரு வேலைக்கு சென்று வருவதற்குள் படாதபாடுபடுகிறார்கள். ஒரு கார் செட் இருந்தால், அதற்கும் வரி விதிப்பது மக்களை அலைக்கழிக்கும் செயல். இப்படி செய்து மக்களை பயமுறுத்துகிறார்கள்,'' என்றார்.



உணவு பாதுகாப்புத்துறைமீது எம்.பி., பாய்ச்சல்''


ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. கடைகள் வைத்து பிழைக்கிறார்கள் என்று பார்த்தால், தரம் குறைந்த உணவு பொருட்கள் விற்கப்படுகின்றன; யாரும் கேட்பதில்லை. மாநகராட்சியும் கேட்பதில்லை, போலீசாரும் கேட்பதில்லை; உணவு பாதுகாப்பு துறையும் கேட்பதில்லை. ஒரு கடை, இரண்டு கடை என்று அதிகரித்து தெரு முழுவதும் கடைகளாகி விடுகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்து ஏற்பட்டு யாராவது இறந்தால், தார்மீக ரீதியாக மாநகராட்சி நிர்வாகமே பொறுப்பு,'' என கடுமையாக சாடினார்,. எம்.பி., ராஜ்குமார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us