sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரேஷன் ஊழியரை அடைத்து பூட்டு போட்ட மக்கள்

/

ரேஷன் ஊழியரை அடைத்து பூட்டு போட்ட மக்கள்

ரேஷன் ஊழியரை அடைத்து பூட்டு போட்ட மக்கள்

ரேஷன் ஊழியரை அடைத்து பூட்டு போட்ட மக்கள்


ADDED : செப் 19, 2025 03:03 AM

Google News

ADDED : செப் 19, 2025 03:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்:தரமில்லாத அரிசி வழங்கியதால், ரேஷன் கடை ஊழியரை கடையினுள் வைத்து பொதுமக்கள் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம், முள்ளிகிராம்பட்டில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இப்பகுதி மக்கள் நேற்று காலை அத்தியாவசிய பொருட்கள் வாங்க அங்குள்ள ரேஷன் கடைக்கு சென்ற போது, அரிசி தரமில்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ரேஷன் கடை ஊழியர் சக்திவேலுவிடம் வாக்குவாதம் செய்தனர்.

அவர், 'நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து வந்த அரிசிக்கு நான் என்ன செய்வேன்' என, கூறினார். ஆத்திரமடைந்த மக்கள், அவரை கடையினுள் வைத்து பூட்டியதால் பரபரப்பு நிலவியது. நெல்லிக்குப்பம் போலீசார் பேச்சு நடத்தி, கடையை திறந்து ஊழியரை விடுவித்தனர்.

வட்ட வழங்கல் அலுவலர் ஆனந்தி, தரமான அரிசி வழங்குவதாக உறுதியளித்தார்.






      Dinamalar
      Follow us