ADDED : மார் 12, 2026 07:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக சட்டசபை தேர்தல், தமிழர்களின் பெருமையை காப்பதற்கானது; தமிழ் கலாசாரத்தை பாதுகாப்பதற்கானது; ஸ்டாலினின் ஊழல் நடைமுறைகளில் இருந்து மக்களை காப்பதற்கானது. தமிழக மக்கள், உதயநிதியை ஒருபோதும் முதல்வராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
'டாஸ்மாக்' ஊழல் வாயிலாக அரசு கருவூலத்தில் இருந்து, முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துக்கு 50,000 கோடி ரூபாய் சென்றுள்ளது. அரசின் பல்வேறு ஒப்பந்தங்களில் ஊழல் மலிந்து கிடக்கிறது.
தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி தலைமையில் ஆட்சி அமையும். எங்கள் கூட்டணியில் அறைக்குள் கலந்து ஆலோசிக்கப்பட்டு, அனைத்து முடிவுகளும் சுமுகமாக எடுக்கப்படுகின்றன.
- பீயூஷ் கோயல், மத்திய அமைச்சர், பா.ஜ.,

