தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/'மக்கள் மேடை' இணையதளம்; அறிமுகம் செய்தார் லதா ரஜினி

'மக்கள் மேடை' இணையதளம்; அறிமுகம் செய்தார் லதா ரஜினி

'மக்கள் மேடை' இணையதளம்; அறிமுகம் செய்தார் லதா ரஜினி

2


ADDED : ஆக 07, 2026 09:01 PM

Follow on GoogleFavourite on Google

2

ADDED : ஆக 07, 2026 09:01 PM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் பயன்பெறும் வகையில் 'மக்கள் மேடை' இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டது.

'மக்கள் மேடை' அமைப்பு சார்பில் பாரத சேவா இணையதள தொடக்க விழா சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்றது. ஶ்ரீ தயா அறக்கட்டளையின் தலைவர் லதா ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலம் முழுவதும் முன்னெடுக்கப்பட உள்ள சமூக நலத்திட்டங்கள் குறித்து அறிவிக்கப்பட்டது.

மேலும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் பயன்பெறும் வகையில் 'மக்கள் மேடை' இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய லதா ரஜினிகாந்த், “இந்த மக்கள் சேவை 45 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. ஒவ்வொரு செங்கல்லாக அமைப்பை கட்டியுள்ளோம். இந்தியாவுக்கு ஒரு புதிய கல்வி முறையை தொடங்கியுள்ளோம். தொடர்ந்து சமூக நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுக்க உள்ளோம். விவசாயிகள் நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும்” என்றார்.

பல ஆண்டுகளாக தாங்கள் மேற்கொண்டு வரும் பணிகளை அதிகளவிலான மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கிலேயே 'மக்கள் மேடை' இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். “நாட்டுப்பற்று எல்லாவற்றையும் விட பெரியது” என்றும் கூறினார்.

காவிரி இணைப்புத் திட்டம் தொடர்பாக 2002ம் ஆண்டு காலத்தில் ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறினார். ரஜினிகாந்த் கடந்த காலத்தில் தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த லதா ரஜினிகாந்த், “ இது ஒரு அரசியல் கேள்வி, காவிரி இணைப்புத் திட்டம் எந்த நிமிடம், எந்த வேளையில் நடக்கிறதோ, அப்போது ரஜினிகாந்த் கண்டிப்பாக செய்வார். ரஜினிகாந்த் 100 சதவீதம் எனக்கு ஆதரவு அளிக்கிறார். அவருடைய ஆதரவை விட அவருடைய ஆசீர்வாதம் எங்களுக்கு முக்கியம்” எனத் தெரிவித்தார்.

'மக்கள் மேடை' இணையதளம் சமூக நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதற்கான தளமாக மட்டுமா அல்லது பொதுமக்களின் பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் தளமாகவும் செயல்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த லதா ரஜினிகாந்த், “இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை. மக்கள் பிரச்னைதான் அரசாங்க பிரச்னை. அரசாங்கத்திடம் கொண்டு சேர்க்க வேண்டிய நிலைமை வந்தால், அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்” என்று தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us