sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கலாம்; அரசுக்கு சென்னை ஐகோர்ட் யோசனை

/

அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கலாம்; அரசுக்கு சென்னை ஐகோர்ட் யோசனை

அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கலாம்; அரசுக்கு சென்னை ஐகோர்ட் யோசனை

அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கலாம்; அரசுக்கு சென்னை ஐகோர்ட் யோசனை

21


ADDED : மார் 21, 2025 07:17 PM

Google News

ADDED : மார் 21, 2025 07:17 PM

21


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கலாமே என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் யோசனை தெரிவித்துள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு;

இலங்கைத் தமிழர் பிரச்னை மற்றும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், 2013 மற்றும் 2017ம் ஆண்டுகளில் அரியலூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக சிவசங்கர் (தற்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர்) மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவ்விரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி சிவசங்கர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள் மீது விசாரணை நடத்திய நீதிபதி இளந்திரையன், ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்தப்பட்டதாக கூறி அவற்றை தள்ளுபடி செய்தார்.

இந்த விசாரணையின் ஒருபகுதியாக சில கருத்துகளையும் அவர் முன் வைத்துள்ளார். இதுபோல அனுமதியின்றி போராட்டம் நடத்தப்பட்டதாக அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்து கோர்ட்டுக்கு சுமை ஏற்படுத்துவதற்கு பதிலாக உடனடி அபராதம் விதிக்கலாமே என்ற யோசனையையும் தமிழக அரசுக்கு நீதிபதி இளந்திரையன் கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us