ADDED : பிப் 27, 2025 07:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை அமைந்தகரையில், வீட்டில் செல்லமாக வளர்த்த பூனையை காணவில்லை என்று உரிமையாளர் புகார் கொடுத்த நிலையில் போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.
சென்னை அடுத்த அமைந்தகரை, மாங்காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீலேஷ், 50. இவர், சூளைமேட்டில், போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவரது வீட்டில், செல்லமாக, நாய் மற்றும் பூனை ஒன்றை ஒன்றரை ஆண்டுகளாக செல்லமாக வளர்த்து வந்துள்ளார்.
திடீரென கடந்த, 17ம் தேதி, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இருந்த பூனையை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், ப்ளூ கிராஸ் அமைப்பிடம், ஸ்ரீலேஷ் புகார் அளித்தார்.
அமைந்தகரை போலீசிலும், கடந்த வாரம் புகார் அளித்தார். பூனை எங்கே என உரிமையாளர்கள் கேள்வி எழுப்ப, போலீசார் வழக்கு பதிந்து, பூனையை வலை வீசி தேடி வருகின்றனர்.