sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மின் இணைப்பு கோரி மனு கொடுக்கும் போராட்டம்

/

மின் இணைப்பு கோரி மனு கொடுக்கும் போராட்டம்

மின் இணைப்பு கோரி மனு கொடுக்கும் போராட்டம்

மின் இணைப்பு கோரி மனு கொடுக்கும் போராட்டம்


ADDED : அக் 02, 2024 01:08 AM

Google News

ADDED : அக் 02, 2024 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:விவசாய மின் இணைப்பு கோரி, தமிழகம் முழுதும் மின் வாரிய அலுவலகங்களில், விவசாயிகள் மனு அளித்தனர்.

தமிழகத்தில், விவசாய பயன்பாட்டிற்கு, 23.56 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இதற்கான கட்டணத்தை, மின் வாரியத்திற்கு தமிழக அரசு வழங்குகிறது. இதனால், அரசு அனுமதிக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒவ்வொரு ஆண்டும் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.

அதன்படி, கடந்தாண்டு தட்கல் திட்டத்தின் கீழ், 50,000 இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், 20,000 இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளன. கால அவகாசம் முடிந்தும் மின் இணைப்புகளை வழங்காமல், வாரியம் அலட்சியம் காட்டி வருகிறது.

இந்நிலையில், தமிழக விவசாய பாதுகாப்பு சங்கம் சார்பில், மாநிலம் முழுதும் உள்ள 12 மின் வாரிய மண்டல தலைமை பொறியாளர் அலுவலகங்களில், இணைப்பு கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடந்தது. இதில், ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

பல அலுவலகங்களில் தலைமை பொறியாளர்கள் இல்லாததால், அங்கிருந்த அலுவலர்களிடம் மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us