ADDED : ஏப் 25, 2025 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார்:
மயானத்திற்கு செல்லும் பொது பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற மக்கள் மனு அளித்துள்ளனர்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், பொது மக்கள் அளித்த மனு விபரம்: வெண்ணந்துார் ஒன்றியம், குட்டலாடம்பட்டி பஞ்., போதமலை செல்லும் வழியில்
மயானம் உள்ளது. இந்த, மயானத்திற்கு 5-வது வார்டு மேற்கு தெரு பகுதியில் இருந்து, செல்லும் பொது பாதையை சில தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால்
விவசாய பொருட்களை கொண்டு செல்வோருக்கு இடையூறு ஏற்படுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

