sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

2012ல் சிவகங்கை மருத்துவகல்லூரியை துவக்க திட்டம் சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

/

2012ல் சிவகங்கை மருத்துவகல்லூரியை துவக்க திட்டம் சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

2012ல் சிவகங்கை மருத்துவகல்லூரியை துவக்க திட்டம் சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

2012ல் சிவகங்கை மருத்துவகல்லூரியை துவக்க திட்டம் சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்


ADDED : ஜூலை 26, 2011 10:55 PM

Google News

ADDED : ஜூலை 26, 2011 10:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:அடுத்த கல்வியாண்டில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்காக, விரைவில் கட்டுமானப் பணிகளை முடிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் தெரிவித்தார்.சிவகங்கையில், 97 கோடி ரூபாயில், மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணி நடக்கிறது.

கடந்த தி.மு.க., அரசு, '2010-2011 கல்வியாண்டிலேயே கல்லூரி துவங்கும்' என தெரிவித்தது. ஆனால், மணல் கிடைக்காததால் கட்டுமானப் பணிகளில் தொய்வு ற்பட்டது.



சுகாதாரத்துறை அமைச்சர் விஜய், மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை நேற்று பார்வையிட்டார். பொதுப்பணி மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளிடம் அவர் கூறியதாவது:இக்கல்லூரியை திறக்க ஆய்வு செய்து, அனுமதி வழங்குமாறு, இந்திய மருத்துவக் கழகத்திற்கு, ஆகஸ்ட்டில் கடிதம் எழுத உள்ளோம். அவர்கள், 2012 ஜனவரியில் வரக்கூடும்.எனவே, கல்லூரி செயல்பட தேவையான கட்டுமானப் பணியை நவம்பருக்குள் முடிக்க வேண்டும். அடுத்த கல்வியாண்டில், தமிழகத்தில் திறப்பதற்கு கல்லூரி இல்லை. எனவே, சிவகங்கையில் தான் திறக்க வேண்டும். அதற்காக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.இவ்வாறு விஜய் தெரிவித்தார்.மருத்துவக் கல்வி இயக்குனர் வம்ச தாரா, சுகாதாரத்துறை இயக்குனர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.








      Dinamalar
      Follow us