sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிரதமர் பிப்.,-ல் மீண்டும் தமிழகம் வர வாய்ப்பு: அண்ணாமலை

/

பிரதமர் பிப்.,-ல் மீண்டும் தமிழகம் வர வாய்ப்பு: அண்ணாமலை

பிரதமர் பிப்.,-ல் மீண்டும் தமிழகம் வர வாய்ப்பு: அண்ணாமலை

பிரதமர் பிப்.,-ல் மீண்டும் தமிழகம் வர வாய்ப்பு: அண்ணாமலை


ADDED : ஜன 19, 2024 09:35 PM

Google News

ADDED : ஜன 19, 2024 09:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பிரதமர் மோடி வரும் பிப்ரவரி மாதத்தில் மீண்டும் தமிழகம் வர வாய்ப்பு உள்ளது என தமிழக பா.ஜ.,தலைவர் அண்ணாமலை கூறினார்.

பார்லிமென்ட் பொதுதேர்தல் வரும் மே மாதத்தில் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து பேச துவங்கி உள்ளன. இதனிடையே தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற பெயரிலான யாத்திரையை மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடி தமிழகத்தில் மூன்று நாள் பயணமாக இன்று (19 ம் தேதி) சென்னை வந்தார். சென்னையில் துவங்கிய கேலோ விளையாட்டு போட்டியையும் துவக்கிவைத்தார். தொடர்ந்து திருச்சி மற்றும் ராமேஸ்வரத்திற்கும் பயணம் மேற்கொள்கிறார் மோடி.

இதனிடையே தமிழக பா.ஜ.,தலைவர் அண்ணாமலையின் பயணம் வரும் பிப்ரவரி மாதம் 2-வாரத்தில் நிறைவடைய உள்ளது. நிறைவு விழாவில் பிரதமர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அண்ணாமலை கூறுகையில் பிப். 2-வது வாரத்தில் மீண்டும் பிரதமர் தமிழகம் வர வாய்ப்பு உள்ளது. வரும் 25-ம் தேதி தமிழகத்தில் 234 தொகுதிகளில் முதன்முறையாக வாக்களிக்க உள்ளவர்களுடன் கானொலியில் உரையாற்றுகிறார். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.






      Dinamalar
      Follow us