sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பா.ம.க. உட்கட்சி பிரச்னைக்கும் பா.ஜ.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: நயினார் நாகேந்திரன்

/

பா.ம.க. உட்கட்சி பிரச்னைக்கும் பா.ஜ.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: நயினார் நாகேந்திரன்

பா.ம.க. உட்கட்சி பிரச்னைக்கும் பா.ஜ.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: நயினார் நாகேந்திரன்

பா.ம.க. உட்கட்சி பிரச்னைக்கும் பா.ஜ.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: நயினார் நாகேந்திரன்

5


ADDED : மே 30, 2025 01:58 PM

Google News

ADDED : மே 30, 2025 01:58 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: 'பா.ம.க.வில் நிலவும் உட்கட்சி பிரச்னைக்கும், பா.ஜ.,விற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.

திருநெல்வேலியில் நிருபர்கள் சந்திப்பில் அவர் நாகேந்திரன் கூறியதாவது: ராணிப்பேட்டையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை வீடு புகுந்து கொலை செய்திருக்கிறார்கள். மற்றொரு மாணவிக்கு பலத்த படுகாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது முழுக்க, முழுக்க சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் உள்ளது. போலீசார் சரியாக எங்கேயுமே நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. கேட்டால் நாங்கள்தான் உண்மையான ஆட்சி செய்கிறோம் என முதல்வர் ஸ்டாலின் மார்தட்டி பேசுகிறார். இதுபோன்ற சம்பவங்களை எல்லாம் பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது.

உத்தரகண்ட் மாநிலத்தில் 2 குட்டி யானை உள்ளது. அதை நெல்லையப்பர் கோவிலுக்கு வழங்குவதற்கு தயாராக உள்ளார்கள். விதிமுறைகளை பின்பற்றி முதல்வரிடம் பேசி யானைகளை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்- அன்புமணி மோதலுக்கு பின்னால் பா.ஜ., இருக்கிறது என்று கூறுகிறார்களே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து நயினார் நாகேந்திரன் கூறியதாவது:

இது முற்றிலும் வேடிக்கையாக இருக்கிறது. பா. ஜ., விற்கும், பா.ம.க.,வின் உட்கட்சி பிரச்னைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தொடர்பும் கிடையாது பின்னணியும் கிடையாது.

இது முழுக்க.முழுக்க அவரது உட்கட்சி பிரச்னை அதைப்பற்றி கருத்து கூறவும் முடியாது. உட்கட்சி பிரச்னைகளில் நாம் தலையிடுவது சரியானதாகவும் இருக்காது என்றார்.

அ.தி.மு.க., ராஜ்யசபா உறுப்பினர் யார் என்ற மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், அதை இ.பி.எஸ்., இடம் தான் கேட்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us