sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போக்சோ குற்றங்கள்

/

போக்சோ குற்றங்கள்

போக்சோ குற்றங்கள்

போக்சோ குற்றங்கள்


ADDED : மே 15, 2025 02:27 AM

Google News

ADDED : மே 15, 2025 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வளர்ப்பு தந்தை கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த, 36 வயது பெண்ணின் இரண்டாம் கணவர், ரஹமத்துல்லா, 30. அந்த பெண்ணுக்கு முதல் கணவர் வாயிலாக பிறந்த, 12 வயது சிறுமியும் இவர்களுடன் வசித்தார். கடந்த, மூன்று மாதங்களாக, சிறுமியிடம், ரஹமத்துல்லா தவறாக நடந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் புகாரின்படி, திருவாரூர் அனைத்து மகளிர் போலீசார், ரஹமத்துல்லாவை போக்சோ வழக்கில் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

குழந்தைக்கு தொல்லை


திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே இடையன்குடியை சேர்ந்தவர் முத்துராஜா, 30. இவர், அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அந்த குழந்தையின் தாய் புகாரில், உவரி போலீசார் முத்துராஜாவை போக்சோவில் கைது செய்தனர்.

மகளுக்கு தொல்லை

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த மலைப்பாளையம், எட்டிக்குட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் நேரு, 35, விசைத்தறி தொழிலாளி. இவரது இரண்டாவது மனைவியின், 12 வயது மகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் புகாரின்படி, திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீசார், நேருவை போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்தனர்.

நோயாளிகளிடம் சில்மிஷம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில், இரவு நேரத்தில் வாலிபர் ஒருவர், பெண் நோயாளிகள் பிரிவுக்கு சென்று சில்மிஷத்தில் ஈடுபடுவதாக, கடந்த பிப்., 1ல், போலீசாருக்கு புகார் சென்றது.

போலீசார் விசாரித்து, சில்மிஷத்தில் ஈடுபட்ட நாகர்பள்ளம் பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி கோபி, 22, என்பவரை, திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us