sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பொன்முடிக்கு உள்நோக்கம் இல்லை: விளக்கம் சொல்கிறது போலீஸ்

/

பொன்முடிக்கு உள்நோக்கம் இல்லை: விளக்கம் சொல்கிறது போலீஸ்

பொன்முடிக்கு உள்நோக்கம் இல்லை: விளக்கம் சொல்கிறது போலீஸ்

பொன்முடிக்கு உள்நோக்கம் இல்லை: விளக்கம் சொல்கிறது போலீஸ்

15


ADDED : ஜூலை 26, 2025 03:24 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 03:24 AM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆபாச பேச்சு வழக்கை, சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசார் முடித்து வைத்துள்ளனர்.

சென்னையில், கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடந்த கூட்டத்தில் பேசிய பொன்முடி, சைவ, வைணவ சமயங்களின் புனிதச் சின்னங்களை, விலைமாதர்களோடு ஒப்பிட்டு பேசியிருந்தார்.

பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். பொன்முடி மீது தமிழகம் முழுதும், பல்வேறு கா வல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப் பட்டன.

சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், புகார் தெரிவித்த பாரத் ஹிந்து முன்னணியின் சென்னை மாவட்ட அமைப்பாளர் சதீஷுக்கு, சென்னை வேப்பேரி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அனுப்பியுள்ள பதில்:

பொன்முடியின் பேச் சை கவனமுடன் பரிசீலித்ததில், மதம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவர் பே சவில்லை. 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த பட்டி மன்றத்தில், விவாதம் செய்யப்பட்ட ஒரு கருத்தையே, மீண்டும் நினைவு படுத்தி பேசியுள்ளார்.

பொன்முடியின் பேச்சை முழுமையாக கேட்காமல், சமூக வலைத ளங்களில் வெட்டி, ஒட்டி பரப்பப்பட்ட பேச்சை மட்டும் பார்த்துவிட்டு, ஒரு குறிப்பிட்ட மதத்தி னரின் மனம் புண்படுவதாக குறிப்பிட்டுள்ளது தெரிய வருகிறது.

எனவே, பொன்முடி மீது குற்ற நடவடிக்கை எடுக்க தகுந்த முகாந்திரம் ஏதும் இல்லை. இம்மனு மீதான விசாரணை முடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஈ.வெ.ரா., - கருணாநிதி குறித்து பேசலாமா?

பாரத் ஹிந்து முன்னணி தலைவர் பிரபு கூறியதாவது: பொன்முடி ஆபாச பேச்சுக்கு, சைபர் கிரைம் போலீஸ் அளித்த பதில் வியப்பாக உள்ளது. '50 ஆண்டுகளுக்கு முன் பேசியதைதான் நினைவு படுத்தியுள்ளார். அதில் தவறு இல்லை' என, காவல் துறை கூறுகிறது. 50 ஆண்டுகளுக்கு முன், ஈ.வெ.ரா., பற்றி கருணாநிதி பேசியதையும், தி.மு.க.,வினர் பற்றி ஈ.வெ.ரா., பேசியதையும், இப்போது நாங்கள் பேசினால், அதையும் இதே கோணத்தில் பார்ப்பரா? ஹிந்து அமைப்புகளின் பேச்சாளர்கள் பலர், உண்மையான க ருத்துகளை பேசியதற்காக கைது செய்யப்பட்டு உ ள்ளனர். அந்த வழக்குகளும் இப்படி முடித்து வைக்கப்படுமா?








      Dinamalar
      Follow us