sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விஷம் வைத்து புறாக்களை கொன்ற மர்ம நபருக்கு போலீஸ் வலை

/

விஷம் வைத்து புறாக்களை கொன்ற மர்ம நபருக்கு போலீஸ் வலை

விஷம் வைத்து புறாக்களை கொன்ற மர்ம நபருக்கு போலீஸ் வலை

விஷம் வைத்து புறாக்களை கொன்ற மர்ம நபருக்கு போலீஸ் வலை


ADDED : ஜன 20, 2025 04:35 AM

Google News

ADDED : ஜன 20, 2025 04:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம் : விஷம் கலந்த அரிசியை வைத்து 50க்கும் மேற்பட்ட புறாக்களை கொன்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த ஊராங்காணி காட்டுகொட்டகையை சேர்ந்தவர் துரைராஜ். நிலத்திலேயே வீடு கட்டி வசித்து வருகிறார். பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்ற துரைராஜ் நேற்று முன்தினம் மாலை காட்டுக்கொட்டகையில் நிலத்தில் உள்ள வீட்டிற்கு சென்றார்.

அப்போது, வீட்டில் வளர்த்து வந்த 50க்கும் மேற்பட்ட புறாக்கள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இவர் ஊருக்கு சென்ற சமயத்தில் யாரோ மர்ம நபர் விஷம் கலந்த அரிசியை துாவி புறாக்களை கொன்றுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விஷம் கலந்த அரிசியை துாவி புறாக்களை கொன்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us